என்ன சொல்லுது எதிர்காலம்?



அடுத்தடுத்து  யோகப் பலன்கள் வரப்போகின்றன!


? என் மகளும், மாப்பிள்ளையும் வெளிநாட்டில் வாழ்ந்து வந்தார்கள். இவர்களுக்கு மூத்ததாக ஒரு பெண்ணும், இரண்டாவதாக மகனும் அறுவை சிகிச்சை மூலமாக பிறந்தார்கள். பேரன் பிறந்த சில நாட்களிலேயே, என் மகள் மிகவும் சோர்வுடனும், மிகுந்த பலவீனத்துடனும் காணப்பட்டாள். அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை செய்த போது அவளுக்கு பார்க்கின்ஸன்ஸ் நோய் உள்ளதாகவும், இனி ஆயுள் முழுவதும் மருந்துகள் மட்டும்தான் வாழ்க்கை என்றும் கூறிவிட்டார்கள்.

இந்நிலையில் ஜோதிடரீதியாக என் பேத்திக்கு ஆயுள் குறைவு என்றும் என் தலையில் இடியை போட்டு விட்டார்கள். மகளை நினைத்து வருந்துவதா, பேத்தியை நினைத்து கவலைப்படுவதா என்று விளங்கவில்லை. நல்ல தீர்வு கூறுங்கள்.
-உஷா ராஜேந்திரன், சென்னை.

உங்களுடைய மாப்பிள்ளையின் ஜாதகத்தில் அடிப்படையிலேயே கொஞ்சம் சிக்கல் இருக்கிறது. திருமணத்தை நீங்கள் பொருத்தம் பார்த்து முடித்தீர்களா என்று தெரியவில்லை. மாப்பிள்ளை ஜாதகத்தில் 7ம் இடத்திற்குரிய, அதாவது, மனைவிக்குரிய கிரகம் சந்திரன், செவ்வாய்-ராகுவுடன் சேர்ந்திருப்பதுடன், நவாம்ச கட்டத்திலும் சனி-ராகு சேர்க்கை காணப்படுகிறது. அந்தளவிற்கு கடுமையான சில தோஷங்கள் உங்கள் மகள் ஜாதகத்தில் இல்லை. உங்கள் மகள் ஜாதகம் நன்றாக இருக்கிறது.

உங்களுடைய பேரன், பேத்தி ஜாதகங்களும் நன்றாகத்தான் இருக்கின்றன. ஆனால், பேரனுக்கு தாயின் கர்ப்பத்தில் இருக்கும்போதே ஏழரைச் சனி தொடங்கியிருக் கின்றது. இந்த வருடம் 2014 டிசம்பர் வரை ஏழரைச் சனி இருக்கின்றது. பேரன் ஜாதகத்தில் 4ம் வீட்டிற்குரிய, தாய் ஸ்தானத்திற்குரிய கிரகமான சுக்கிரன், சூரியனுடன் சேர்க்கைப் பெற்று பலவீனமடைந்துள்ளது. அதேபோல மாதுர்க்காரகனான சந்திரன், சனியுடன் சேர்ந்து 8ல் மறைந்திருக்கிறது.

தற்சமயம் ஏழரைச் சனியும் நடைபெற்று கொண்டிருப்பதால்தான் உங்கள் மகளுக்கு கடுமையான உடல் நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், பேத்தியின் ஜாதகத்தில் கிரக அமைப்புகள் நன்றாக உள்ளன. அதனால் பேத்தியைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். பேரன் ஜாதகமும் 2015 ஜனவரி முதல் நன்றாகவே இருக்கிறது. கவலைப்படாதீர்கள், உங்கள் மகள் குணமடை வார். நால்வரின் ஜாதகங்களின் அடிப்படையில் பார்க்கும்போது ஒருமுறை நீங்கள் திருநள்ளாறு சென்று எள் தீபமேற்றி வருவது நல்லது என்று தெரிகிறது. அதன்பின் காளஹஸ்தி சென்று நெய் தீபமேற்றுங்கள். இதனால் உங்கள் மகள் ஆரோக்யமும், ஆயுளும் கூடும்; பேரன் மீதான ஏழரைச்சனியின் தாக்கம் குறையும். மாப்பிள்ளைக்கு ராகு-கேதுவால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் நீங்கி நல்லது நடக்கும்.    

?  எனது மூத்த மகனுக்கு 33 வயதில் திருமணம் நடந்து 6 மாதத்திற்குள் விவாகரத்தாகிவிட்டது. அவன் எப்பொழுது மறுமணம் செய்து கொள்வான்? எதிர்காலம் எப்படியிருக்கும்? தற்சமயம் மும்பையில் வேலை பார்க்கிறான். எங்களோடு சேர்ந்து இருப்பானா?
 - இரா.ஹரிராம், சேலம்.

உங்கள் மகனின் ஜாதகத்தை சுக்கிர நாடி எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தோம். சனி, செவ்வாய், சூரியன், புதன் என நான்கு கிரகங்களும் ஒரே கட்டத்தில் அமர்ந்திருக்கின்றன. நான்கும் ஒன்றுக்கொன்று கிரக யுத்தம் செய்து கொண்டிருக்கின்றன. குருவும், ராகுவுடன் சேர்ந்திருக்கிறார். இதனாலும், முக்கிய கிரகங்கள் பலவீனமடைந் திருப்பதாலும், உங்கள் மகனின் ஜாதகத்தில் குடும்ப வாழ்க்கை சிக்கலாக உள்ளது. குடும்ப ஸ்தானத்திற்குரிய கிரகமும், மனைவி ஸ்தானத் திற்குரிய கிரகமும் உங்கள் மகனின் ஜாதகத்தில் மிகவும் பலவீனமாக இருக்கிறது. கோச்சார கிரகங்களை வைத்து ஆராயும்போதும் நேரம், காலமும் சுமாராகத்தான் உள்ளன.

ஆனாலும், உங்கள் மகனுக்குத் திருமணம் உண்டு. 2015 ஜூன் மாதத்திற்குப் பிறகு திருமணம் நிகழ வாய்ப்பிருக்கிறது. அவருடைய போக்கிலேயே அந்தத் திருமணம் அமையும். ஏற்கனவே திருமணம் முடிந்து விவாகரத்தான பெண்ணை மணம் முடிக்கலாம். வேறு மொழியும், இனம் சார்ந்த பெண்ணாக இருக்கும். அந்தப் பெண்ணை மணம் முடித்து அவர் சிறப்பாக வாழ்வார். அவருடைய ஜாதகத்தில் பூர்வ புண்ய ஸ்தானம் வலுவிழந்து காணப்படுவதால் அவர் வட இந்தியாவிலேயே தன்னுடைய வாழ்க்கையை தொடர்வதுதான் அவருக்கு நிம்மதியையும், மகிழ்ச்சியையும், ஓரளவு பணவரவையும் தரக்கூடியதாக இருக்கும். நல்ல எதிர்காலம் இருக்கிறது. உங்களுடைய மகனின் திருமணமும், வாழ்க்கையும் சிறப்பாக இருக்கும். அவருக்கு பிள்ளை பாக்யமும் கிடைக்கும். முடிந்தால் சரபேஸ்வரரை ஞாயிற்றுக் கிழமையில் நெய் தீபமேற்றி வணங்குங்கள். உங்களுடைய பிரார்த்தனை நிறைவேறும்.

?எனது வலது கண் பார்வை uஸ்மீtவீs என்ற நோயால் பாதிக்கப்பட்டுள்ளது. பார்வைத் திறன் 95% குறைந்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக, சென்னை, மதுரையிலுள்ள பிரபலமான கண் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் பலன் இல்லை. பார்வை மீண்டும் பெற வழி சொல்லுங்கள். கடந்த 10 ஆண்டுகளாக முயற் சித்தும் எம்.ஏ. தேர்வில் வெற்றி பெற முடியாமல், பல தடைகளை அனுபவித்து வருகிறேன். நான் எம்.ஏ.தேர்வில் வெற்றி பெற பரிகாரங்கள் ஏதாவது சொல்லுங்களேன்.      
- மு.அண்ணாமலை, திருவண்ணாமலை.

உங்கள் ஜாதகத்தை பிருகு ஜோதிட அடிப்படையில் ஆராய்ந்தோம். மீன லக்னம், துலா ராசியில் பிறந்திருக்கிறீர்கள். ஜாதகத்தில் லக்னாதி பதி குரு நீச்சமாகி இருக்கிறார். நவாம்சத்திலும் குரு லக்னத்திற்கு 8ல் சென்று மறைந்து விட்டார். பிரபல யோகாதிபதி செவ்வாய், ஜாதகத்தில் நீசமாகி நிற்கிறார். நவாம்சத்திலும் செவ்வாய் கேதுவுடன் சிக்கிக் கொண்டுள்ளார். நேத்திர ஸ்தானாதிபதியான, வாக்கு ஸ்தானாதிபதியான செவ்வாய், நீச்சமாகி பலவீனப்பட்டிருப் பதால்தான் பார்வைக் கோளாறு இருந்து கொண்டேயிருக்கிறது. பொதுவாக கண்கள் காரகத்துவம் பெற்றிருக்கக் கூடிய கிரகங்களான சுக்கிரனும், சந்திரனும் ஜாதகத்தில் பலவீனமாக இருக்கின்றன.

சுக்கிரன் சூரியனுக்கு 11ல் அமர்ந்து வேதை ஸ்தானத்தை பெற்றிருப்பதாலும், சுக்கிரனும் பலவீனமடைந்திருப்பதாலும்தான் இந்தப் பார்வைக் கோளாறு. அதேபோல் சந்திரனும் லக்னத்திற்கு 8ல் மறைந்து காணப்படுவதால்தான் மருத்துவத்தால் தீர்க்க முடியாதபடியும் பார்வைக் கோளாறு அதிகமாக உள்ளது. 12ல் கேது நிற்பதாலும் மோட்ச ஸ்தானாதிபதி சனி, ஆன்மிக வேத கிரகமான குருவின் சேர்க்கை பெற்றிருப்பதாலும் பிறவி இத்துடன் உங்களுக்கு முடிவடைகிறது. கடந்த ஜென்மத்தில் செய்த நல்லது, கெட்டதையெல்லாம் இந்தப் பிறவியிலேயே நீங்கள் முடித்து விடுகிறீர்கள். அதனால்தான் உங்களுக்கு இதுபோன்ற தீர்க்க முடியாத பார்வைக் கோளாறு உண்டாகியிருக்கிறது. நீங்கள் புண்ணிய ஆத்மா. இத்துடன் நீங்கள் பிறவியை முடிப்பதால், அடுத்தது பிறவியில்லாத, உன்னதமான மோட்ச நிலையை அடைகிறீர்கள்.

ஜாதகத்தில் தற்சமயம் புதன் மகாதசையில் சந்திர புக்தி நடைபெற்று கொண்டிருக்கிறது. 28.3.2015 வரை சந்திர புக்தி இருக்கும். அதற்கடுத்து செவ்வாய் புக்தி. பிறக்கும்போதே உங்கள் ஜாதகத்தில் வாக்கு ஸ்தானாதிபதி பலவீனமாக இருப்பதால்தான் உயர்கல்வியில் தேர்ச்சி பெற இயலவில்லை. நினைவாற்றலையும், தேர்வு நேரத்தில் வினாவிற்கு ஏற்ற சரியான விடையளிக்கும் ஆற்றலைத் தரக்கூடிய 5ம் இடம் பலவீனமாக இருப்பது இந்த நிலைக்கு முக்கிய காரணம்.

 புதன் ஆட்சிப் பெற்று அமர்ந்திருந்தாலும் நட்சத்திரப் பாகையை வைத்துப் பார்க்கும்போது பகை நட்சத்திரத்தில் அமர்ந்துள்ள உபநட்சத்திராதிபதியின் பலமும் சரியில்லாததால்தான் உயர்கல்வியில் தேர்ச்சி பெற இத்தனை தடுமாற்றம். கோச்சார கிரகங்களின்படி, தற்சமயம் ஜென்மச் சனி நடைபெறுகிறது. 15.12.2014க்குப் பிறகு நீங்கள் தேர்வெழுதினால் வெற்றி கிடைக்கும். ஏழரைச் சனி இருப்பதால் விடைகளை அடிக்கடி எழுதிப் பாருங்கள்.

படித்ததை நினைத்துப் பார்த்து அந்த விடைகளை பலமுறை மனதில் நினைத்துப் பார்க்கக் கூடிய சக்தி குறைவாக உள்ளது. எனவே, எழுதிப் பார்ப்பது நல்லது. நிச்சயம் தேர்ச்சி பெறுவீர்கள். ஜாதகத்தில் லக்னாதிபதி குருவாக இருந்து அவர் பாவ கிரகத்துடன் சேர்ந்து பலவீனமாக காணப்படுவதாலும், நவாம்சத்தில் பலவீனமாக காணப்படுவதாலும் நீங்கள் திருச்செந்தூர் முருகப் பெருமானை வழிபடுவது நல்லது. அவர் அருளால் தேக ஆரோக்யமும், மனநிம்மதியும் அதிகரிக்கும். கல்வியில் தேர்ச்சி பெற நீங்கள் பார்த்தசாரதிப் பெருமாளை வணங்குவது நல்லது.      

?என்னை ஒரு பெண் விரும்புகிறாள். அந்தப் பெண் தனுசு ராசி, உத்திராடம் நட்சத்திரம் எங்களுக்குத் திருமணமாகுமா?     - பி.சிவகுமார், கடலூர்.மேஷ லக்னம், கன்னி ராசியில் பிறந்திருக்கும் உங்கள் ஜாதகத்தில் அடிப்படை கிரகமான லக்னாதிபதி செவ்வாய், சனியுடன் சேர்ந்து 8ல் மறைந்து கிடப்பதால் திருமணம் உள்ளிட்ட பல விஷயங்களும் சற்றே தடைப்பட்டு முடிவடையும். தற்சமயம் உங்களுக்கு ஏழரைச் சனியும் நடைபெறுகிறது. 15.12.2014ம் தேதியோடு ஏழரைச் சனி முடியப் போகிறது.

தற்சமயம் ராகு தசையில், சூரிய புக்தி நடைபெறுகிறது. 3.12.2014 வரை சூரிய புக்தி நடைபெறும். சூரியன் சாதகமாக இல்லை. ஆனால், 4.12.2014 முதல் தொடங்கும் சந்திர புக்தி உங்களுக்கு சகல சௌபாக்யங்களையும் கொடுக்கும். சந்திரன், கேதுவுடன் இருந்தாலும் உங்களுடைய லக்னத்திற்கு அவர் சுகாதிபதியாக வருவதால் 4.12.2014 முதல் 4.6.2016 வரையுள்ள சந்திர புக்தி காலகட்டத்தில் திருமணம் சிறப்பாக முடியும்.

7ம் இடத்திற்குரிய கிரகம் சுக்கிரன் 10ம் வீட்டில் கேந்திராதிபத்ய தோஷமடைந்து காணப்படுவதால் சாதாரண குடும்பத்திலிருந்து நீங்கள் பெண் எடுப்பது நல்லது. அதிக எதிர்பார்ப்பு இல்லாத பெண்ணை நீங்கள் மணம் முடிப்பது, திருமண வாழ்க்கையை சிறப்பாக்கும். பரிகாரமாக திருப்பதிக்கு ஒருமுறை செல்லுங்கள். ஏழரைச் சனி நடைபெறுவதால் வெள்ளி அல்லது சனிக் கிழமையில் திருமலையின் கீழிருந்து நடந்து சென்று வெங்கடாஜலபதி பகவானை தரிசிப்பது நல்லது. திருமணமும் நல்ல விதத்தில் முடியும். 

?எங்களது மகனுக்கு 2009ம் வருடம் ஏப்ரல் மாதம் திருமணம் செய்வித்தோம். 2010ம் வருடம் பிப்ரவரியில் அவனுக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தது. மருமகளின் ப்ளாக்மெயில் செய்கையால் கடந்த மூன்று வருடங்களாக நாங்கள் மகனைவிட்டு பிரிந்து வாழ்கிறோம். நாங்கள் எங்கள் மகனுடன் சேர்ந்து வாழ முடியுமா?
- ரெ.கோபாலன், அணுபுரம்.

உங்கள் ஜாதகத்தை சாதக அலங்காரம் எனும் நூலை அடிப்படையாகக் கொண்டு ஆராய்ந்தேன். மேஷ லக்னம், ரிஷப ராசியில் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். இது நல்ல அமைப்புதான். ஆனால், ஜாதகத்தில் 5ம் இடமான புத்திர ஸ்தானாதிபதியான சூரியன், 8ல் மறைந்து சனியின் பார்வையைப் பெறுகிறார். அதேபோல 5ம் வீட்டில் நிழல் கிரகமான ராகு இருக்கிறது.  நவாம்சத்திலும் பூர்வ புண்யாதிபதி, புத்திர ஸ்தானாதிபதியான சூரியன் பலவீனமாக காணப்படுகிறார். இந்த அமைப்பால்  மகனால் மனவருத்தங்கள், சங்கடங்கள், மகனைப் பிரிந்து வாழக்கூடிய நிலை எல்லாம் ஜாதக அமைப்பில் உள்ளன. உங்கள் மனைவியின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானாதி பதியான செவ்வாய் 8ல் மறைந்து காணப்படுகிறார். புத்திரக்காரகனான குருவும் நீசம் பெற்றுக் காணப் படுகிறார்.

மனைவியின் ஜாதகத்திலும் மகனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பு இல்லை. எனவே, மகனுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக இருக்க முடிய வில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருக் காதீர்கள். உங்களுடைய மருமகளின் ப்ளாக்மெயில் செய்கையால் இந்த சோகம் நடைபெறவில்லை. உங்கள் ஜாதகத்திலும், உங்கள் மனைவியின் ஜாதகத்திலும் புத்திர ஸ்தானாதிபதி பலவீனமாக இருப்பதால்தான் ஏற்பட்டுள்ளது. கோச்சார கிரகங்கள், தசாபுக்தி அடிப்படையில் ஜாதகத்தில் குரு சற்றே வலுவாக இருப்பதால் 2015 ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு மகனுடன் சுமுக உறவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது.

பரிகாரமாக நீங்கள், மனைவியுடன் ஒரு பிரதோஷ நாளில் திருவண்ணாமலை சென்று அண்ணா மலையாரை வணங்குவதுடன் கிரிவலப் பாதையில் உள்ள ஈசான்ய லிங்கம் அமைந்துள்ள இடத்தில் சென்று தேவாரம் அல்லது திருவாசகப் பாடலை மனமுருகப் பாடுங்கள் - இருவரின் ஜாதகத்திலும் உள்ள புத்திர ஸ்தானாதிபதிகள் பலமடைவார்கள். மகனுடன் சேர்ந்திருக்கும் அமைப்பும் உண்டாகும்.    

?எனது கணவருக்கு திறமை, அனுபவம் இருந்தும் உத்யோகத்தில் உரிய அங்கீகாரம் இல்லை. அவர் செய்யும் வேலைகளுக்கெல்லாம் வேறு யாரோ பெயர் தட்டிச் செல்கிறார். அவருக்கு வெளிநாட்டில் வேலை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா? எங்களுடைய வீட்டை விற்க முடிவு செய்துள்ளோம். நல்ல விலை போகுமா? என் மகளுக்கு எப்போது திருமணம் முடியும்?
- ஒரு வாசகி.

உங்கள் கணவர், சிம்ம லக்னம், மகர ராசியில் பிறந்திருக்கிறார். லக்னத்திலேயே சுக்கிரன் அமர்ந்திருப்பது எல்லா வகையிலும் அவருக்கு நிம்மதியான, மகிழ்ச்சியான வாழ்க்கையை தரக்கூடிய அமைப்பாகும். 4ம் இடத்தில் குரு அமர்ந்திருப்பதால் நீண்ட ஆயுள் உண்டு. லக்னாதிபதி சூரியன் 12ம் வீட்டில் மறைந்து விட்டார். லக்னாதிபதி 12ல் மறைந்தாலே தகுதிக்கேற்ப எதுவும் அமையாது. எதையும் போராடித்தான் பெற முடியும். சாதாரணமாக, இயல்பாக கிடைக்கக் கூடிய சில நன்மைகள், சில சலுகைகள் கூட கடுமையான போராட்டத்திற்குப் பிறகுதான் கைக்கு வந்து சேரும். நெருப்பு கிரகமான சூரியனின் லக்னத்தில் பிறந்த இவருக்கு ஜல வீடான கடகத்தில் சூரியன் விழுந்ததால்தான் தகுதிக்கேற்ப, உழைப்பிற்கேற்ப அங்கீகாரம் கிடைக்கவில்லை. உத்யோக ஸ்தானாதி பதியான சுக்கிரன் லக்னத்தில் இருப்பது நல்லது தான்.

ஆனால், நந்தி வாக்யம் எனும் நூல் பத்துக்குரிய கிரகம் லக்னத்தில் கேந்திர தோஷம் அடையக் கூடாது என்று கூறுகிறது. அதுமட்டு மல்லாமல் சுக்கிரன் பகை வீட்டில் அமர்ந்திருப்பதால், உத்யோகத்தில் போராட்டங்கள் இருந்து கொண்டு தான் இருக்கும்; எல்லாம் தாமதமாகத்தான் கிடைக்கும். ஆனால், உத்யோக ஸ்தானத்தை பூர்வ புண்யாதிபதியான குருபகவான் பார்ப்பதால் இவருக்கு உத்யோகம் நிலைக்கும். எங்கு சென்றாலும் மரியாதை கிடைக்கும். மரியாதையாக நடத்துகிறார்கள், முக்கியத்துவம் தருகிறார்கள். ஆனால், பதவி உயர்வு என்று வரும்போது இவருடைய பெயரை மறந்துவிடுகிறார்கள் என்று தான் சொல்ல வேண்டும்.

தற்சமயம் நடைபெறும் ராகு மகா தசை, 10.3.2024 வரை இருக்கும். 10.9.2016 வரை ராகு தசையில் புதன் புக்தி. தற்சமயம் புதன் சாதகமாக இருக்கிறார். அதனால் நல்ல வாய்ப்பு களெல்லாம் அடுத்தடுத்து இவரைத் தேடி வரும். கோச்சார கிரகங்களின்படி 13.6.2014 முதல் குரு சாதகமாகிறார். லக்னாதிபதி சூரியனுடன் குரு சேர்வதால் அதுமுதல் நல்ல வாய்ப்புகள் வரும். வீடும் நீங்கள் எதிர்பார்த்தபடி நல்ல விலைக்குப் போகும். உங்களுடைய மகளுக்கும் நல்ல வரன் அமையும். திருமணம் கோலாகலமாக நிகழும். 13.6.2014 - 13.6.2015 காலகட்டத்தில் சீரும் சிறப்புமாக திருமணம் முடியும். கணவரின் ஜாதகத்தில் ராகு, கன்னியில் அமர்ந்து ராகு தசை நடைபெறுவதால், அவருடன் ஸ்ரீரங்கம் செல்லுங்கள்.

அம்மா மண்டபத்தில் நீராடிவிட்டு ரங்கநாதப் பெருமாளை சேவியுங்கள். சக்கரத்தாழ்வார் சந்நதியில் உங்கள் மகளுக்கு எத்தனை வயதோ அத்தனை நெய் தீபமேற்றி வழிபடுங்கள். அடுத்தடுத்து யோகப் பலனை நீங்கள் எதிர்பார்க்கலாம். கணவருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் உண்டு. ஆனால், இப்போது முயற்சிக்க வேண்டாம். ஜனவரி 2016 முதல் அதைப் பற்றி யோசிப்பது நல்லது. ஓய்வு பெற்ற பிறகும் அவருக்கு வேறு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

ஜோதிட  ரத்னா கே.பி.வித்யாதரன்