நித்தியமும் காத்திடும் நித்யக்லின்னா



நித்யக்லின்னா நித்யாநித்யக்லின்னா என்றால் எப்போதும் தயையோடு கூடியவள் என்று பொருள். இத்தேவியின் இதயம் என்றும் கருணையால் நனைந்தே உள்ளதாம். இந்த அம்பிகையின் மகிமையைப் பற்றி பெரிய திருவடியான கருட பகவானின் பெருமைகளைக் கூறும் கருட புராணத்தில் ‘நித்யக்லின்னா மதோவக்ஷயே திரிபுரம் புக்திமுக்திதாம் எனக் கூறப்பட்டுள்ளது. இத்தேவியை துதித்து வணங்குவோர் புக்திமுக்தியுடன் வாழ்வர் என அதற்குப்பொருள்.

சிவந்த நிறம், சிவந்த கரங்கள், புன்முறுவல் பூத்த திருமுகமண்டலம், முக்கண்கள், நெற்றியில் அரும்பும் வியர்வைத் துளிகளுடன் திருமுடியில் பிறைச்சந்திரன் துலங்க அருள்பாலிக்கும் இந்த அன்னைக்கு ‘‘மதாலஸா’’ என்ற பெயரும் உண்டு. தன் நான்கு கரங்களிலும் பாசம், அங்குசம், பானபாத்திரம், அபய முத்திரை தரித்தவள். அணிகலன்கள் அன்னையை அலங்கரிக்கும் பேறு பெற்றன. சர்வாலங்காரங்களுடன் அழகே உருவாய் திருவருள்புரியும் தேவியிவள். தன்னை வணங்குவோர் வாழ்வில் வளம் சேர்ப்பவள் இந்த அம்பிகை. வழிபடு பலன்குடும்ப ஒற்றுமை ஓங்கும். வீண் தகராறுகள் வராமல் காக்கும்.

நித்யக்லின்னா காயத்ரிஓம் நித்யக்லின்னாயை வித்மஹே நித்ய மதத்ரவாய தீமஹி தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

மூல மந்திரம்

ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் ஹ்ரீம் நித்யக்லின்னே மதத்ரவே ஸ்வாஹா.

த்யான ஸ்லோகங்கள்

அருணாமருணா கல்பாம் அருணாம் ஸுகதாரிணீம்
அருண் ஸ்ரக்விலேபாம் தாம் சாருஸ்மேர முகாம்புஜாம்
நேத்ர த்ரயோல்லாஸ வக்த்ராம் பாலே கர்மாம்ஸீ மௌக்திகை:
விராஜமானாம் முகுட வஸதர்தேந்து ஸேகராம்
சதுர்பி: பாஹுபி: பாஸமங்குஸம் பான பாத்ரகம்
அபயம் பிப்ரதீம் பத்மம் மந்த்யாஸீனாம் மதாலஸாம்.

பத்மராக மணிப்ப்ரக்யாம் ஹேம தாடங்க பூஷிதாம்
ரக்த வஸ்த்ரதராம் தேவீம் ரக்தமால்யானு லேபனாம்
அஞ்சனாஞ்சித நேத்ராம், பத்ம பத்ர நிபேக்ஷணாம்
நித்யக்லின்னாம் நமஸ்யாமி சதுர்புஜ விராஜிதாம்.

ரக்தாம் ரக்தாங்க வஸனாம் சந்த்ர சூடாம் த்ரிலோசனாம்
ஸ்வித்ய த்வக்த்ராம் மதாகூர்ணலோசனாம் ரத்னமூர்ச்சிதாம்
பாஸாங்குஸௌ கபாலம் ச மஹாபீதிஹரம் ததா
தததீம் ஸம்ஸ்மரேன்னித்யக்லின்னாம் பத்மாஸனஸ்திதாம்
விந்து வக்த்ராம் மத கூர்ணலோசனாம் ரத்னபூஷிதாம்
தததீம் ஸ்ம்ஸ்மரேன்நித்யாம் பத்மாஸன விராஜிதாம்

ஸர்வக்ஞாதிபிராவ்ருதாம் ஸுசரிதாம் ஸௌபாக்ய ஸௌக்யப்ரதாம்
கீர்வாணார்ச்சித பாதபத்மயுகளாம் கௌரீம் கணேசப்ரியாம்
சர்வாணீம் சந்த்ரபிம்பவதனாம் நிர்வாண பீஜாங்குராம்
த்யாயேத் தக்ஷிணகாளஹஸ்தி நிலயாம் திவ்யாங்க ராகோஜ்வலாம்.

ஸ்ரீஸுக்த நித்யா ஸ்லோகம்
ஸ்ரீஸுக்த ஸம்ஸ்துதாம் இகார ப்ரக்ருதிக பூஷா கலாத்மிகாம்
நித்யக்லின்னா நித்யா ஸ்வரூபாம் ஸர்வ ஸம்பத்பூரண சக்ரஸ்வாமினி
அஹங்காராகர்ஷிணி சக்தி ஸ்வரூபிணீம் ஸ்ரீமாதவ வக்ஷஸ்தல ஸ்வரூபிணீம்
ஸர்வ மங்கள தேவதாம் கீர்த்தி லக்ஷ்மீ ஸ்வரூப நித்யக்லின்னா தேவ்யை நம:

வழிபட வேண்டிய திதிகள்
சுக்ல பக்ஷ த்ருதியை/க்ருஷ்ண பக்ஷ த்ரயோதசி
(த்ருதியை திதி ரூபாயை நித்யக்லின்னாயை நம:)

நவேத்யம்பசும்பால். திதி தான பலன் இத்தேவிக்கு தயிர் சாதம் நிவேதனம் செய்து தானம் செய்தால், சகல துன்பங்களிலிருந்தும் நிவாரணம் பெறலாம்.

பஞ்சோபசார பூஜை

ஓம் நித்யக்லின்னா நித்யாயை கந்தம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை தூபம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை தீபம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை நைவேத்யம் கல்பயாமி நம:
ஓம் நித்யக்லின்னா நித்யாயை கற்பூர நீராஞ்ஜனம் தர்சயாமி நம:

இத்திதியில் பிறந்தோரின் குணநலன்கள்

இத்திதியில் பிறந்தவர்கள் சுகவாசிகள். இவர்கள் நெற்றியில் வியர்வை சுரக்கும். செந்தாமரைப் பூவினால் இத்திதியில் பிறந்தவர்கள் இத்தேவியை அர்ச்சித்தால் தடைகள் தவிடுபொடியாகும். இவர்கள் அனைவரையும் அடக்கியாளும் குணம் கொண்டவர்கள். வாழ்வில் வறுமையின் சுவையை இவர்கள் ஒரு நாளும் சுவைக்க மாட்டார்கள். அண்டிச் செல்பவரை அரவணைப்பர். இத்திதியில் பிறந்தோர்க்கு தினமும் இத்தேவியின் மூலமந்திரத்தை தினமும் 48 முறை பாராயணம் செய்தால் அல்லல்கள் அகன்று நன்மைகள் பெருகும்.

யந்திரம் வரையும் முறை

சந்தன குங்குமக் கலவையால் முக்கோணம், வட்டம், எட்டிதழ்கள், கிழக்கு மேற்கு திசைகளில் வாயில்களுள்ள இரு பூபுரங்கள் உடைய யந்திரத்தை வரையவும். முக்கோண மூலையில் ஷோபினி, மோகினி, லீலா போன்ற சக்திகளையும், எட்டு தளங்களில் நித்யா, நிரஞ்சனா, க்லின்னா, க்லேதினி, மதனாதுரா, மதத்வரா, திராவிணி, விதானா போன்ற சக்திகளையும் சதுரத்தில் மாதவிகா, மங்களா, மன்மதார்த்தா, மனஸ்வினி, மோகா, அமோதா, மனோமயி, மாயா, மந்தா, மனோவதி போன்ற சக்திகளையும் தியானித்து பூஜிக்கவும்.

இத்திதிகளில் செய்யத் தக்கவை
சங்கீதம், இசைக்கருவிகள் கற்றல், ஓவியம்
பயிலுதல், வீடு கட்டுதல், புதுமனை புகுதல் முதலியன.
அகத்தியர் செய்த சுக்ல பக்ஷ த்ரிதியை திதி துதி
திரிதிகையில் அசுத்தமற்றுச் சுத்தமாகிச்
சிற்சொரூபந் தனைச் சேர்ந்த தெளிவே கண்டு

உறுதியுடன் உனதுபதம் அகலாச் சிந்தை உறவு
செய்வாய் உம்பரையே உமையே தாயே
அறுதியாய் இகத்தாசை அகன்ற ஞான ஆனந்த
வாசையைத்தா அடியேனுக்குச்
சுருதியிலே மனமிருக்கத் துணைசெய்தாயே
சோதியே மனோன்மணியே சுழிமுனை வாழ்வே.

ச்ருதி - உபதேச மொழி, தேவி மகா சங்கீத
ரசிகை என கூறப்பட்டுள்ளது.
அகத்தியர் செய்த க்ருஷ்ண பக்ஷ த்ருதியை திதி துதி
பாசவலைதனில் சிக்கி அலையாமல் தான்
பண்புடனே அடியவருக்கருள வேண்டி
நேசமுடன் சதுரகிரி மலையிலேதான்

நித்தியமும் நடனமது புரியும் தேவி
பேசரிய ஞானமதை எனக்களித்த பேரான
சுமங்கலியே பெரியோருக்குத்
தோஷமது வாராமல் காக்கும் தேவி சோதி
மனோன்மணித் தாயே சுழிமுனை வாழ்வே.

மாத்ருகா அர்ச்சனை
ஓம் நித்யக்லின்னாயை நம:
ஓம் நித்ய மதத்ரவாயை நம:
ஓம் உமாயை நம:
ஓம் விஸ்வரூபிண்யை நம:

ஓம் யோகேஸ்வர்யை நம:
ஓம் யோககம்யாயை நம:
ஓம் யோகமாத்ரே நம:
ஓம் வஸுந்தராயை நம:
ஓம் தன்யாயை நம:
ஓம் தனேஸ்வர்யை நம:
ஓம் தான்யாயை நம:
ஓம் ரத்னதாயை நம:
ஓம் பஸுவர்தின்யை நம:

ஓம் கூஷ்மாண்ட்யை நம:
ஓம் தாருண்யை நம:
ஓம் சண்ட்யை நம:
ஓம் கோராயை நம:
ஓம் கோரஸ்வரூபாயை நம:
ஓம் மாத்ருகாயை நம:
ஓம் மாதவ்யை நம:
ஓம் தஸாயை நம:
ஓம் ஏகாக்ஷராயை நம:

ஓம் விஸ்வமூர்த்தயே நம:
ஓம் விஸ்வாயை நம:
ஓம் விஸ்வேஸ்வர்யை நம:
ஓம் த்ருவாயை நம:
ஓம் ஸர்வாயை நம:
ஓம் க்ஷமாயை நம:

ஓம் ஆத்யாயை நம:
ஓம் பூதாத்மாய நம:
ஓம் பூதிதாயை நம:
ஓம் பூதிவர்தின்யை நம:
ஓம் பூதேஸ்வரப்ரியாயை நம:
ஓம் பூத்யை நம:
ஓம் பூதமாலாயை நம:

ஓம் யௌவன்யை நம:
ஓம் வைதேஹ்யை நம:
ஓம் பூஜிதாயை நம:
ஓம் ஸீதாயை நம:
ஓம் மாயாவ்யை நம:
ஓம் பவவாஹின்யை நம:

ஓம் ஸத்வஸ்தாயை நம:
ஓம் ஸத்வநிலயாயை நம:
ஓம் ஸத்வாயை நம:
ஓம் ஸத்வசிகீர்ஷணாயை நம:

ஓம் விஸ்வஸ்தாயை நம:
ஓம் விஸ்வநிலயாயை நம:
ஓம் ஸ்ரீபலாயை நம:
ஓம் ஸ்ரீநிகேதனாயை நம:
ஓம் ஸஸாங்கதராயை நம:
ஓம் நந்தாயை நம:

நித்யக்லின்னா ஓவியம்: ஸி.ஏ.ராமச்சந்திரன்

ந.பரணிகுமார்