குரு லாபஸ்தானத்தைப் பார்ப்பதால் வரவுகள் தடையில்லாமல் வரும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். அடிக்கடி வெளியூர் செல்ல நேரிடும்.
15ம் தேதி வரை சூரியனும் செவ்வாயும் இணைந்து 4ல் இருப்பதால் வசதி வாய்ப்பும் உத்தியோகத்தில் உயர்வும் கிடைக்கும்.அஷ்டம சனி தேவையில்லாத பிரச்னைகளை உருவாக்குவார். பல நேரத்தில் மனக்குழப்பங்கள் அதிகமாகும்.
8ம் தேதி புதன் 5ல் வருவதால் பலரும் வியக்கும் வண்ணம் செயல்பட முடியும். ராகு 10ல் இருப்பதால் தொழில் வகையில் எண்ணற்ற நண்பர்களை சந்திப்பீர்கள். அவர்களின் யோசனைகளும், உதவிகளும் உங்கள் திட்டங்களுக்கு பேரு தவியாக இருக்கும். அதனால் நீங்கள் மேன்மை அடைவீர்கள். அதேசமயம், பின்விளைவு களையும், பக்க விளைவுகளையும் நன்கு ஆராய்ந்து செயல்களில் ஈடுபட்டீர்கள் என்றால், முதலில் தடை வந்தாலும் பிறகு எல்லாமே வெற்றியில் முடியும்.
1ம் தேதி மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். 2, 3 தேதிகளில் கூடுதல் வருமானம் வந்தாலும் அதற்கு ஏற்ப செலவுகளும் கூடுதலாக உண்டாகும். 4, 5 தேதிகளில் உங்களுக்கு சில பிரச்னைகள் ஏற்பட்டாலும், அவையெல்லாம் எளிதில் மறைந்து விடும். 6, 7 தேதிகளில் உறவினர்கள் வகையில் சற்று அலைச்சல் உண்டாகும். அவர்களுக்கு உதவுவதில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள். 8, 9, 10 தேதிகளில் இதுவரை இருந்த தடைகள் விலகி உயர்வை அடையும் வாய்ப்பும் கிட்டும். 11, 12 தேதிகளில் அமைதியாக இருப்பது நன்மையில் முடியும்.
13, 14, 15 16 தேதிகளில் எல்லா விதத்திலும் உயர்வும் புகழும் கிட்டும். உழைப்பில் முழுக் கவனம் செலுத்தி வருமான நிலையை உயர்த்துவீர்கள். வெளிநாடு செல்ல திட்டம் இருந்தால் முயற்சி செய்யவும்; அது பலனளிக்கும். 17, 18 தேதிகளில் பொருள் வரவால் உங்கள் வாழ்வில் எண்ணற்ற மகிழ்ச்சியை உண்டாக்கும். 19, 20 தேதிகளில் வீண்
செலவுகள் அடிக்கடி ஏற்படும். வெளியூர் பயணத்தை தவிர்த்து விடுங்கள்.
21, 22 தேதிகளில் குடும் பத்தில் மகிழ்ச்சி, பணவரவு அதிகரிக்கும். 23, 24 தேதிகளில் நினைத்ததை முடிக்கும் வரையில் ஓய்வு எடுக்க மாட்டீர்கள். அதனா லேயே உங்கள் செயல்திறன் பலரை வியக்க வைக்கும். 25, 26 தேதிகளில் வசதி வாய்ப்புகள் நினைத்தபடி கிடைக்கப் பெறுவீர்கள். அதனால் நற்சுகம் உண்டாகும். பிரிந்த நண்பர் கள் இணைவார்கள். 27, 28 தேதிகளில் உணவு வகையில் கட்டுப்பாடு தேவை. நாவுக்கு முக்கியத்துவம் கொடுக் காமல், வயிற்றுக்கு முக்கியத் துவம் கொடுங்கள்.
மாணவர்கள் புகழுடன் விருதுகளும் பெறுவீர்கள். குடும்பத்தில் அதிக செலவுகள் உண்டாவதால், பெண்கள் சற்று நிம்மதி குறைந்து காணப்படுவீர்கள். கலைஞர்கள் பலவித சிறப்புகள் பெறுவீர்கள். 29, 30 தேதிகளில் செய்யும் தொழிலில் நல்ல தனலாபம் கிடைக்கும்.
பரிகாரம்: சனிக்கிழமை தோறும் சனிபகவானுக்கு எள் விளக்கேற்றி வழிபட்டால் தடை விலகி நல்ல முடிவு கிடைக்கும்.