தனஸ்தானத்தில் குருவும் செவ்வாயும் இணைந்து காணப்படுவதால் குடும்பத்தில் இருந்த தொல்லைகள் விலகும். வருவாய் நிலை பலவகைகளில் உயர்ந்து மகிழ்ச்சி உண்டாகும். வீடு வாங்கும் யோகம் கிட்டும். உடன்பிறந்தவர்களின் உதவிகள் தொடர்ந்து கிடைத்துக் கொண்டே இருக்கும்.
15ம் தேதிவரை சூரியன் 3ல் இருப்பதால் மனஉறுதியுடன் செயல்படுவீர்கள். எதையும் திட்டமிட்டே செய்வீர்கள். பழைய அனுபவங்களை மனதில் கொண்டு, எதையெல்லாம் தவிர்க்க வேண்டும், எதையெல்லாம் ஏற்க வேண்டும் என்ற மனப்பக்குவம் கிடைக்கும். 16ம் தேதிக்கு மேல் சூரியன் 4ல் வருவதால் பலவிதத்தில் உயர்வும், வசதி வாய்ப்புகளும் தேடி வரும். புதன் ஆட்சி பெற்றிருப்பதால் ஆற்றல் மிகுந்து காணப்படுவீர்கள். சுறுசுறுப்பும், புது எண்ணங்களும் கொண்டு பிறர் கடினமானவை என்று ஒதுங்கும் விஷயங்களை மிக எளிதாக முடித்துக் காட்டுவீர்கள்.
சனி 7ல் இருப்பதால் குடும்ப விஷயங்களில் அடிக்கடி அக்கறை செலுத்த வேண்டும். பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று குடும்பக் கடமைகளை அலட்சியமாக ஒதுக்கி விடாதீர்கள். 7ம் வீட்டு அதிபதி பலம் பெற்று விளங்குவதால் சோதனைகள் குறையும். ராகு 9ல் இருப்பதால் தந்தையாருடன் சில கருத்து வேறுபாடு நிலவும்.
1ம் தேதி செல்வாக்கும், சொல்வாக்கும் உயரும். 2, 3 தேதிகளில் எதிர்பார்க்காத செலவுகள் வந்து சேரும். 4, 5 தேதிகளில் அலைச்சல் குறைந்து நிம்மதி ஏற்படும். 6, 7 தேதிகளில் கற்பனை வளம் கூடும். எழுத்தாளர்களுக்கு முன்னேற்றமாக இருக்கும். உதவிகள் தேடி வரும். 8, 9, 10 தேதிகளில் பலரை அனுசரித்து போவது நல்லது. சிலசமயம் துயரங்கள் வந்து வாட்டும்.
11, 12 தேதிகளில் மறைமுக எதிர்ப்புகள் இருக்கும். 13, 14 தேதிகளில் மற்றவர்கள் விஷயங்களில் தலையிட வேண்டாம். அவசரப்பட்டு எதையும் செய்ய வேண்டாம். 15, 16 தேதிகளில் வீண் அலைச்சலால் உடல்நலக் குறைவு ஏற்படும். 17, 18 தேதிகளில் செய்யும் தொழிலில் உயர்வு கிடைக்கும். 19, 20 தேதிகளில் லாபம் அதிகமாகும். 21, 22 தேதிகளில் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். முன்ஜாமீன் யாருக்கும் தரவேண்டாம். 23, 24 தேதிகளில் நல்ல மாற்றங்கள் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்கள் வாங்கி மகிழ்வீர்கள். பலருக்கு வெகு நாட்களாக எதிர்பார்த்த வீட்டு மனை வாங்கும் அமைப்பு உருவாகும். 27, 28 தேதிகளில் மனம் சற்று சஞ்சலப்பட்டு தேவையில்லாத விஷயங்களில் நாட்டம் வரும். அதனால் சற்று நிதானம் தேவை. சில நேரம் உடல்நலமும் பாதிக்கப்படும்.
மாணவர்கள் திறமையால் உயர்ந்து செல்வீர்கள். உத்தியோகம் செல்லும் பெண்கள் செய்யும் பணியில் சிறப்பாக செயல்படுவீர்கள். கலைஞர்கள் உழைப்பில் கவனம் செலுத்தினால் பல வாய்ப்புகள் தேடி வரும். 29, 30 தேதிகளில் செலவுகள் குறைந்து சுபநிகழ்ச்சிகள் விரைவில் கைகூடும்.
பரிகாரம்: ராமரை தொடர்ந்து வணங்கினால் வாழ்வில் நல்ல திருப்பங்கள் ஏற்படும்.