ஜோக்ஸ்



‘‘வீட்டுக்குத் திருட வந்தவனோட எதுக்கு செல்ஃபி எடுத்தீங்க..?’’
‘‘நாளைக்கு திருடினது யார்னு தெரியாம நீங்க மாமூலுக்கு கஷ்டப்படக் கூடாது பாருங்க..!’’
- பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.



‘‘எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது...’’ 
‘‘விடுங்க தலைவரே! எங்களுக்கு புகழவும் பிடிக்காது...’’
- ரியாஸ், சேலம்.

‘‘மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் ஏன் தூங்கி வழியறாங்க..?’’
‘‘பிரியாணிக்குப் பதில் பொங்கல் போட்டுட்டாங்களாம்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

“இங்க அட்மிட் ஆனா சீக்கிரத்துல டிஸ்சார்ஜ் பண்ண மாட்டாங்க போலிருக்கே?”
“எதனால அப்படிச் சொல்றிங்க?”
“கேஸ் கனெக்‌ஷன், பால் போடறது, பேப்பர் போடறதுன்னு எல்லாத்தையும் ஆஸ்பத்திரி அட்ரசுக்கு மாத்திக்கச் சொல்றாங்களே!”
- எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.

‘‘தினமும் இரவு 12 மணிக்கு தலைவர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடணும்னு கண்டிஷனா... ஏன் அப்படி?’’
‘‘தலைவருக்கு தூக்கத்தில் நடந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடற வியாதியாம். அதனால தவறாமல் கையெழுத்துப் போட்டுடுவார்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘தமிழ்நாட்டு
அரசியல்வாதிகளில் மேக்ஸிமம் ‘மீம்ஸ்’ வாங்கியிருக்கும் தலைவர்
அவர்களே...’’
- பர்வீன் யூனுஸ், ஈரோடு

‘‘புதுப் படத்தை ரிலீஸ் பண்ணாம ஏன் நிறுத்தி வச்சிட்டாங்க..?’’
‘‘கதை என்னோடதுன்னு ஒருத்தரும் கேஸ் போடலையாம்..!’’
- சி.சாமிநாதன், சரவணம்பட்டி.