ஜோக்ஸ்
‘‘வீட்டுக்குத் திருட வந்தவனோட எதுக்கு செல்ஃபி எடுத்தீங்க..?’’ ‘‘நாளைக்கு திருடினது யார்னு தெரியாம நீங்க மாமூலுக்கு கஷ்டப்படக் கூடாது பாருங்க..!’’ - பெ.பாண்டியன், கீழசிவல்பட்டி.
‘‘எனக்குப் புகழ்ச்சி பிடிக்காது...’’ ‘‘விடுங்க தலைவரே! எங்களுக்கு புகழவும் பிடிக்காது...’’ - ரியாஸ், சேலம்.
‘‘மாநாட்டுக்கு வந்த தொண்டர்கள் எல்லாம் ஏன் தூங்கி வழியறாங்க..?’’ ‘‘பிரியாணிக்குப் பதில் பொங்கல் போட்டுட்டாங்களாம்!’’ - வி.சகிதா முருகன், தூத்துக்குடி.
“இங்க அட்மிட் ஆனா சீக்கிரத்துல டிஸ்சார்ஜ் பண்ண மாட்டாங்க போலிருக்கே?” “எதனால அப்படிச் சொல்றிங்க?” “கேஸ் கனெக்ஷன், பால் போடறது, பேப்பர் போடறதுன்னு எல்லாத்தையும் ஆஸ்பத்திரி அட்ரசுக்கு மாத்திக்கச் சொல்றாங்களே!” - எஸ்.எஸ்.பூங்கதிர், வில்லியனூர்.
‘‘தினமும் இரவு 12 மணிக்கு தலைவர் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போடணும்னு கண்டிஷனா... ஏன் அப்படி?’’ ‘‘தலைவருக்கு தூக்கத்தில் நடந்து போலீஸ் ஸ்டேஷனுக்கு போயிடற வியாதியாம். அதனால தவறாமல் கையெழுத்துப் போட்டுடுவார்!’’ - எஸ்.ராமன், சென்னை-17.
‘‘தமிழ்நாட்டு அரசியல்வாதிகளில் மேக்ஸிமம் ‘மீம்ஸ்’ வாங்கியிருக்கும் தலைவர் அவர்களே...’’ - பர்வீன் யூனுஸ், ஈரோடு
‘‘புதுப் படத்தை ரிலீஸ் பண்ணாம ஏன் நிறுத்தி வச்சிட்டாங்க..?’’ ‘‘கதை என்னோடதுன்னு ஒருத்தரும் கேஸ் போடலையாம்..!’’ - சி.சாமிநாதன், சரவணம்பட்டி.
|