குங்குமம் டாக்கீஸ்



* ‘‘எங்க கூட நீங்க பேசி ரொம்ப நாள் ஆச்சு. பேசுங்க சமந்தா’’ என ட்விட்டரில் ரசிகர்கள் உருக, அவர்களின் அன்பைக் கண்டு சிலிர்த்துவிட்டார் சமந்தா. ‘ஐயெம் ரியலி வெரி சாரி... அடுத்த வாரம் கண்டிப்பா சாட் பண்றேன்’’ என வாக்குறுதி தந்திருக்கிறார்.

* மலையாளத்தில் மோகன்லால் நடித்த ‘புலி முருகன்’ அங்கே சூப்பர் ஹிட். வசூலைக் குவித்து வருகிறது. இந்த சக்சஸ் சந்தோஷத்தை கேரளாவில் கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்திருக்கின்றனர்.

* ‘ரெமோ’ விழாவில் கண்கலங்கிய சிவகார்த்திக்கு போனில் பலரும் ஆறுதல் சொல்லியிருக்கிறார்கள். அதில் ஹைலைட், ரஜினியின் ஆறுதல். ‘‘இதெல்லாம் தானாக சரியாகிடும். மனதைப் போட்டு குழப்பிக்காதீங்க சிவா’’ என சிவாவுக்கு நம்பிக்கை கொடுத்து உற்சாகமூட்டியிருக்கிறார் ரஜினி.

* நட்பிற்காக பணமே வாங்காமல் விடிவி கணேஷ் படத்தில் நடிக்கிறார் சந்தானம். கண் கலங்கிவிட்டாராம் கணேஷ். சந்தானம் வாங்காமல் விட்ட செக்கை ஃப்ரேம் போட்டு மேஜையில் வைத்திருக்கிறார் கணேஷ்.

* ஜெய், அஞ்சலி இரண்டு பேரும் சேர்ந்தே சுற்றுகிறார்கள். ஆனால், இருவர் வீட்டிலும் எதிர்ப்பு கிளம்பி யிருக்கிறது. அதனால் இரு குடும்பத்தினரையும் சமாதானப்படுத்துகிற கட்டாயத்தில் இரண்டு பேருமே இருக்கிறார்கள்.

* அஜித் படத்திற்கு இந்தி வில்லன் யார் என பல்வேறு யூகங்கள் நிலவுகின்றன. அநேகமாக விவேக் ஓபராய் என முடிவாகலாம்.

* மோகன்ராஜா இயக்கத்தில் சிவகார்த்தி, நயன்தாரா நடிக்கும் படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் துவங்குகிறது.

* சிக்னலில் ஷில்பா ஷெட்டி கார் காத்திருக்க, ஒரு நடைபாதை வியாபாரி கார் கதவைத் தட்டி ஒரு புத்தகத்தை அவரிடம் விற்க முயன்றார். அது ஷில்பா எழுதிய ‘தி கிரேட் இண்டியன் டயட்’ நூல். தன் புத்தகத்தை அடையாளம் கண்டு ஷில்பா சிரிக்க, ஷில்பாவை அடையாளம் கண்டு அந்த வியாபாரி சிரிக்க, இந்த போட்டோ இன்ஸ்டாகிராமில் 30 ஆயிரத்துக்கு மேல் லைக் வாங்கி விட்டது.

* அனிருத்திற்கும், தனுஷுக்கும் இப்போது சண்டைக் காலம். இருவரும் பார்த்துக்கொள்வதோ, பேசிக்கொள்வதோ கிடையாது. இருந்தாலும் இந்த வருஷம் அவரை நேரில் சந்தித்து வாழ்த்தியிருக்கிறார் தனுஷ். இதே மாதிரி ஜி.வி. பிரகாஷ் - தனுஷ் இரண்டு பேருக்கும் இடையில் இப்போதும் பனிப்போர்தான்.

* சிம்புவும், கௌதம் மேனனும் யார் துணையும் இல்லாமல் அரை மணி நேரம் உட்கார்ந்து பேச, எல்லாம் சரியாகிவிட்டது. படத்தை நவம்பர் இறுதியில் வெளியிடத் தீர்மானம் செய்துவிட்டார்கள்.

* விஜய்யின் அடுத்த படத்திற்கு அட்லிதான் டைரக்டர். ஆனால் ஜி.வி. பிரகாஷுக்கு பதிலாக ஏ.ஆர். ரஹ்மான்தான் ம்யூசிக். நயன்தாராதான் ஹீரோயின் என முடிவாகிவிட்டது.

* எப்போ கல்யாணம்? என ‘சுப்ரமணியபுரம்’ சுவாதியிடம் கேட்டால், அழகான தெற்றுப்பல் தெரிய சிரிக்கிறார். ‘‘எங்க அப்பா மாதிரி நல்ல குணமுள்ள ஆள் இன்னும் கிடைக்கலையே?’’ என்கிறவர், ‘‘சினிமாக்காரங்களை திருமணம் செய்வேனான்னு தெரியல’’ என்றும் மனம் திறந்துள்ளார்.

* விக்னேஷ்சிவன் இயக்கத்தில் சூர்யா, கீர்த்தி சுரேஷ் நடிக்கும் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்குகிறது.

* தமிழில் மகேஷ்பாபு, விஷால் படங்களில் நடித்து வரும் ரகுல் ப்ரீத் சிங்கின் ஃபேவரிட் ஹாபி, கோல்ஃப் விளையாட்டு. ஷூட்டிங் ஸ்பாட் அருகே கோல்ஃப் மைதானத்தைப் பார்த்துவிட்டால் உற்சாகமாகிவிடும் ரகுல், ஹைதராபாத்தில் நடந்த கோல்ஃப் போட்டியிலும் பங்கேற்று கலக்கியிருக்கிறார். விளையாட்டுப் பொண்ணு!

* கோலிவுட்டில் நதியா ரிட்டர்ன்ஸ். ‘கொடி’, ‘காஷ்மோரா’வோடு, நதியா போலீஸாக நடித்த ‘திரைக்கு வராத கதை’ படமும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆகிறது. துளசிதாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.