கேரளாவின் ஷேரிங் பிளான்!



கோழிக்கோடு ஜெயில் வார்டன் அனில்குமாரின் ஐடியா இது. தான் மாற்றலாகிப் போகும்போது பிளானைத் தொடங்கிவிட்டுச் சென்றிருக்கிறார்.திட்டம் இதுதான்.

சிறைக்கைதிகளின் கேண்டீனில் ‘Food for Freedom’ கவுண்டரில் 25 ரூபாய் கொடுத்தால் ஐந்து சப்பாத்தி வித் வெஜ் / நான்வெஜ் கிரேவி சாப்பிட டோக்கன் கிடைக்கும்.அந்த டோக்கனை வாங்கி ஏழைகளுக்கு வழங்க இருக்கும் இடத்தில் குத்தி வைத்துவிட்டால் தேவைப்படுபவர்கள் அதனை பயன்படுத்திக்கொள்வார்கள்.

‘அக்டோபர் 23ல் அமலான திட்டம் மாஸ் வெற்றி. பல்வேறு அமைப்புகள் பல்க் ஆர்டரில் டோக்கன்களை அள்ளிச்செல்கிறார்கள். தொடங்கிய அன்று மட்டும் 25 ஆயிரம் ரூபாய்க்கு டோக்கன் சேல்ஸ் ஆனது!’ என்கிறார் இத்திட்டத்தின் சூபர்வைசரான ராஜேஷ்குமார்.

ரோனி