முடிகொட்டியதால் சூசைட்!



இன்று தற்கொலை செய்வதற்கு சிறியளவிலான மன அழுத்தமே போதுமானதாக இருக்கிறது. கடன், பரீட்சை தோல்வி என நிகழ்ந்த தற்கொலை இப்போது எப்படி மாறியிருக்கிறது தெரியுமா? மதுரையிலுள்ள ஜெய்ஹிந்த்புரத்தைச் சேர்ந்த மிதுன்ராஜ், பொறியாளர். குயிக்காக டப்பு தேறும் ஐடி வேலை. ஆனால், தற்கொலை செய்து கொண்டுவிட்டார். காரணம்? தலையில் முடி கொட்டியதுதான்.

அலோபதி டூ அமேஸான் ஆயில் வரை தலையில் தேய்த்தும் முடி கொட்டுவது நிற்கவேயில்லை. அதேநேரம் அவரது அம்மா வசந்தி, மிதுனுக்கு வரன் பார்க்கத் தொடங்கினார். தலைமுடி விவகாரத்தால் அதுவும் தட்டிப்போக, டிப்ரெஷனுக்கு உள்ளான மிதுன் ஆபீஸ் போகாமல் வீட்டிலேயே பழியாக கிடந்து, அம்மா வெளியே போன சமயம் சீலிங் பேனில் தூக்கு மாட்டி இறந்தேவிட்டார்.    

- ரோனி