ஹெல்த் கார்டு!



ஆதார் கார்டு, ஸ்மார்ட் ரேஷன் கார்டு வரிசையில் அடுத்து இந்திய மக்களுக்கு வழங்கப்படவிருப்பது ஹெல்த் கார்டு.

நோய்களின் வரலாற்றை ஹெல்த் கார்டிலுள்ள தனித்துவமான எண்ணை பதிவிட்டால் தெரிந்துகொள்ள முடியும். இந்திய அரசின் குடும்பநலம் மற்றும்  சுகாதாரத்துறை விரைவில் இந்த அட்டையை மக்களுக்கு அறிமுகப்படுத்தி விநியோகிக்கப் போகிறது. அண்மைய பட்ஜெட் அறிவிப்பில் கூறப்பட்ட  ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் இந்த விநியோகம் நடைபெறும்.

1.5 லட்சம் சுகாதார மையங்களைத் தொடங்கி அதில் பயன்படுத்த ஏதுவாக இந்த ஹெல்த் கார்டுகள் வழங்கப்படும். ‘‘சுயநினைவின்றி ஒரு நோயாளி  மருத்துவமனை சென்றால் கூட அவரது ஹெல்த் கார்டு மூலம் அவருக்கு இருக்கும் நோய்கள், மருந்துகள், சிகிச்சை பற்றி மருத்துவர் அறிந்து  சிகிச்சை அளிக்க முடியும்!’’ என்கிறார் சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர்.             

ரோனி