கவிதை வனம்
தொலைந்து போன கதை
நினைக்கும்போதெல்லாம் ஊறிய கதைகளை கூறிக்கொண்டிருந்தார்கள் தாத்தா பாட்டிகள் தங்களுக்குத் தெரிந்த ஒன்றிரண்டு கதைகளை கேட்கும்போதெல்லாம் திரும்பத் திரும்பச் சொல்லி திருப்தி கொண்டார்கள் அம்மா அப்பாக்கள் கதைகளை தொலைத்துவிட்ட நாம்தான் குழந்தைகளை நச்சரித்துக் கொண்டிருக்கிறோம் ரைம்ஸ் சொல்லு பாட்டு பாடு என
- சாமி கிரிஷ்
குறுங்கவிதை இறந்த தாத்தா குடை தைத்த இடத்தில் காளான்
- தக்ஷன் தஞ்சை
|