கவிதை வனம்
வானாகி...மண்ணாகி!
என் வானத்தில் தேம்பித் தேம்பி அழுகின்றன நீ விரல் நீட்டி எண்ணாத நட்சத்திரங்கள்.
* வீச்சரிவாளைக் கொண்டிருக்கின்றன உன் கண்கள் உள்ளமோ மெத்மெத்தென நினைவூட்டும் பரம்படித்த வயலை. * வந்தாய் தந்தாய் விரிந்தன சிறகுகள் சுருங்கின எல்லைகள் அவ்வளவுதான் வேறென்ன நீயின்றி அமையாது உலகு.
- பொன்.இரவீந்திரன்
பாரம்
லேசான சுமையை மிகுந்த பாரமுடன் தூக்கிச்செல்கிறான் பஞ்சு மிட்டாய் விற்பவன் குழந்தைகளைக் காணவில்லை.
- பா.ரமேஷ்
|