கவிதை வனம்



வானாகி...மண்ணாகி!

என் வானத்தில்
தேம்பித் தேம்பி
அழுகின்றன
நீ விரல் நீட்டி
எண்ணாத நட்சத்திரங்கள்.

*
வீச்சரிவாளைக்
கொண்டிருக்கின்றன
உன் கண்கள்
உள்ளமோ
மெத்மெத்தென
நினைவூட்டும்
பரம்படித்த வயலை.
*
வந்தாய் தந்தாய்
விரிந்தன சிறகுகள்
சுருங்கின எல்லைகள்
அவ்வளவுதான்
வேறென்ன
நீயின்றி அமையாது உலகு.

- பொன்.இரவீந்திரன்

பாரம்

லேசான சுமையை
மிகுந்த பாரமுடன்
தூக்கிச்செல்கிறான்
பஞ்சு மிட்டாய் விற்பவன்
குழந்தைகளைக்
காணவில்லை.
- பா.ரமேஷ்