கவிதை வனம்



திருமணக் கனவுகள்

திருமணக் கனவுகளை
தூக்கிச் செல்கிறாள்
கன்னி ஒருத்தி
கனவுகள் அவளைப்போல
கருப்பும் வெள்ளையுமாகவே
இருந்தன
கலர் கனவுகள் காண
வழியில்லை அவளுக்கு
சில கனவுகள்
அவளுள் மலர்ந்ததுண்டு
அக்கனவை கலராக்க
காலம் கைகூடவில்லை
இறுதியில் கனவை
வந்த விலைக்கு
விற்றுவிட்டு
தலைச்சாயம்
பூசிக்கொள்கிறாள்.

- திருமதி பிரியா

நடை

நிதானமாய்
நடைபோடும்
தாத்தாவின்
பின்னங்கையிலிருந்து...
அவரை இழுத்து நடக்கும்
பேரனின் முன்னங்கால் வரை
தொடர்ந்து பயணிக்கிறது
தலைமுறை இடைவெளி!

- நா.கி.பிரசாத்