தங்க பிரியாணி



சமூக வலைத்தளங்களில் ஹிட் அடித்து லைக்குகளை  அள்ளிக் கொண்டிருக்கிறது துபாயில் இயங்கிவரும் ‘பாம்பே போரோ’ என்ற ஹோட்டல். காரணம், புதிதாக இந்த ஹோட்டல் அறிமுகப்படுத்தியிருக்கும் தி ராயல் கோல்டு பிரியாணி. துபாயிலேயே விலையுயர்ந்த பிரியாணி இதுதான். பிரியாணி அரிசி, கீமா அரிசி, வெள்ளை அரிசி என மூன்று வகையான அரிசிகளில் இந்த பிரியாணி கிடைக்கிறது.

மட்டன், சிக்கன், முட்டை, உருளைக்கிழங்கு, முந்திரி, மாதுளம் பழத்துடன் தங்க இழைகளும் கலந்து சமைக்கப்படுவது இதன் சிறப்பு. மூன்று கிலோ எடையுள்ள இந்த பிரியாணி தங்கத் தட்டில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு பரிமாறப்படுகிறது. பிரியாணி வேண்டுபவர்கள் முன்பே ஆர்டர் கொடுக்க வேண்டும். பிரியாணியுடன் ராஜ்புத் சிக்கன் கபாப் போன்ற விசேஷமான அசைவ உணவுகளும் போனஸாக கிடைக்கும். இதன் விலை ரூ.19.707.

சக்தி