கணினிமயமாகிறது காவல்துறை...

‘‘எஞ்சினியர் சார்! எக்ஸ் 3 ஸ்டேஷன்லேர்ந்து பேசறோம். ஆன் டூட்டியில இருக்கும்போது ஐயாவோட லேப்டாப்ல மணல் பூந்துடுச்சு... எப்படி ரிமூவ் பண்றது?’’
‘‘யோவ்! மாமூல் கணக்கை எல்லாம் தனியா வேற கம்ப்யூட்டர்ல வைன்னு சொன்னேன் இல்ல... இப்ப பாரு! கமிஷனர் பார்த்துட்டு மெமோ குடுத்துட்டுப் போறாரு!’’
‘‘எஞ்சினியர் சார், மெமரி வீக்கா இருக்கறது கம்ப்யூட்டருக்கு இல்ல... நம்ம ஐயாவுக்குத்தான்! மாமூல் பணத்தை வாங்கிட்டு இல்லேன்றாரு...’’
‘‘திட்டாதீங்க ஏட்டய்யா! போரடிக்குது... இன்ஸ்பெக்டரய்யா வர்றவரைக்கும் இதுல திருடன் போலீஸ் விளையாட்டு இருந்தா விளையாடலாமா?’’
‘‘என்ன சார் பண்றது..? நம்ம போலீஸ் பாஷையில சொல்லிக் கொடுத்தாதான் இவங்களுக்கு கம்ப்யூட்டர் புரியுது!’’
‘‘சார்! மேட்டரை காப்பி, பேஸ்ட் பண்ணி, சர்ச் பட்டனை க்ளிக் பண்ணா திரும்ப வரப் போகுது... இதுக்குப் போயி திருதிருன்னு முழிக்கறீங்களே..?’’
|