‘மழைக்காலம்’ படத்தில் ‘காதல்’ சரண்யா நடித்த நிர்வாணக் காட்சி பற்றிய செய்தி இப்ப அடிக்கிற வெயிலுக்கேற்ற குளுகுளு டானிக்தான்!
டி.சதீஷ்குமார், புதுச்சேரி.
நாகேஷ், கே.ஏ.தங்கவேலு போன்ற நகைச்சுவை நடிகர்களும் பி.எஸ்.வீரப்பா, நம்பியார், அசோகன் என அரை டஜன் வில்லன்களும் ‘கோச்சடையான்’ படத்தில் உயிர் பெற்று எழப் போவதை எண்ணி இப்போதே மனம் துள்ளுகிறது. ‘கோச்சடையான்’ பற்றி அப்டேட்ஸ் கொடுப்பதில் ‘களைப்
படையான்’ நீங்கள்தான்!
ஏ.ஜி.கல்யாணசுந்தரம், சென்னை126.
‘அவதார் 2’வில் தமன்னா, கமல் படத்தில் வில்லன் ‘பவர் ஸ்டார்’... என்ற முதல் இரண்டு பக்க செய்திகளைப் படித்தும் அப்படியே ‘ஷாக் ஆயிட்டோம்’! அப்புறம்தான் ஏப்ரல் ஒண்ணை முன்னிட்டு, நீங்கள் காமெடி கீமெடி பண்ணலையே என்று மைல்டா ஒரு டவுட்டு வந்துச்சு. இருந்தாலும் உங்க குறும்புக்கு ஒரு அளவே இல்ல பாஸ்!
டி.எம்.சுரேந்தர், திண்டுக்கல்.
தமிழர் விளையாட்டான கபடிக்கு இங்கிருக்கும் மரியாதையை நினைக்கையில் வேதனைதான் மிச்சம். கிரிக்கெட்டில் கொட்டும் பணத்தில் கொஞ்சத்தை கபடி பக்கம் திருப்பினால் போதும்... கபடி கவிதாக்களின் ஆதங்கமும் மறையும்; இந்தியர்களின் தலையும் நிமிரும்!
வி.விஜய், சென்னை4.
விஜயா டீச்சரை தன் காதலைச் சொல்லவிடாமல் இன்னும் எத்தனை வாரங்களுக்குத்தான் தவிக்க விடப் போகிறார் மெட்டி ஒலி திருமுருகன்?
பெ.பாக்கியம், மதுரை.
கஷ்டப்பட்டு அப்பா வாங்கிக் கொடுத்த செருப்பை பேப்பரில் சுற்றி கையில் எடுத்துப் போய் காலேஜில் மட்டும் போட்டுக் கொண்டது பற்றி எஸ்.எம்.சில்க்ஸ் அதிபர் மனோகர் கூறி
யிருப்பது கண்களை பனிக்கச் செய்தது. ‘திருப்புமுனை’ தொடர் இளைஞர்கள் மனதில் ஒரு உத்வேகத்தை ஏற்படுத்துவது உறுதி!
இரா.கல்யாணி கந்தசாமி, மதுரை.
காவிரிக்கு அடுத்தபடியாக கர்நாடக அரசு தென்பெண்ணை நதி நீரிலும் கை வைத்து விட்டது வேதனை. ‘எங்கள் கழிவுநீருக்கு நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்’ என்பதெல்லாம் நிச்சயம் தட்டிக் கேட்கப்பட வேண்டிய திமிர் வார்த்தைகள்!
வி.நிம்மி, சென்னை109.
வாரா வாரம் வெளிவந்து அமர்க்களப்படுத்தும் ‘வலைப்பேச்சு’ பகுதி மெய்யாலுமே சூப்பர் நைனா. கவிதைங்க, தத்துவங்க சும்மா சொல்லக்கூடாது. ஹா... ஹா... படிக்கச் சொல்ல சும்மா ஷோக்கா கீது அண்ணாத்தே!
எஸ்.பக்கிரிசாமி, சென்னை39.