நியூஸ் வே



* அடுத்த ரவுண்டுக்கு ஆயத்தமாகிவிட்டாலும் யாரும் அஞ்சலியைத் தேடிப் போகவில்லை. சற்று உப்பியதே காரணம் என்பதைப் புரிந்துகொண்டவர், உடலைக் குறைக்க முயற்சித்துக் கொண்டிருக்கிறார்.

* நிறைய பேர் சிம்பு-ஹன்சிகா காதல் போல் சித்தார்த்-சமந்தா காதலும் முடிந்துவிடும் என நினைக்கிறார்கள். அதற்கு எந்த இடத்தையும் சித்தார்த் தரவில்லை. மணிக்கொரு தடவை இரண்டு பேரும் அப்டேட் செய்து கொண்டே இருக்கிறார்கள். மூன்று மணி நேரம் சித்தார்த்தோடு சேர்ந்து இருந்தால் சமந்தா முகத்தில் அழகான புன்னகை நிற்கும்.

* மாசத்திற்கு ஒரு தடவை ஆர்யாவின் ஹோட்டலில் ரவி, விஷால், ஜீவா ஆகியோரோடு இப்போது சத்யாவும் சந்தித்துக்கொள்கிறார்கள். ஆளுக்கு ஆள் டிப்ஸ் பரிமாறிக்கொள்கிறார்கள். படங்கள் குறித்து விவாதிக்கிறார்கள். தோல்வி என்றால் காரணம் ஆராய்கிறார்கள். ஆக... பயனுள்ள சந்திப்புதான்!

* பெப்சி தலைவர் பதவியில் இருந்துகொண்டு பஞ்சாயத்துகளில் பிஸியாக இருந்த அமீர், இந்த முறை தேர்தல் பக்கமே தலை காட்டாமல் ஒதுங்கிவிட்டார். தான் இயக்கி நடிக்கும் பட வேலைகளில் சார் இப்போ பிஸி.

இப்பொழுதெல்லாம் நயன்தாரா ஊரிலிருந்து வந்தால் பெட்டியை ஹோட்டல் ரூமில் வைத்துவிட்டு, த்ரிஷா வீட்டுக்குப் போய் விடுகிறார்.அவர் களின் நட்பு வட்டம் இறுகி விட்டது. இரவுதான் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்புகிறார் நயன். இதாவது நீடிக்கட்டும் அம்மணி!

* ‘பூஜை’யில் மினிஸ்டரையே மேக்கப் போட வைத்துவிட்டார் இயக்குனர் ஹரி. பீகாருக்கு லொகேஷன் பார்க்கப் போனவர், பீகார் கலை வளர்ச்சித்துறை அமைச்சர் வினய்யை சந்திக்க வேண்டியிருந்தது. ஆளைப் பார்த்த அடுத்த நொடியே ‘கலெக்டர் வேடத்துக்கு கரெக்டான ஆள் இவர்தான்’ என அவரை நடிக்க வைத்துவிட்டாராம்.

ரன்யா. கன்னடத்துக் கிளியான இவர் சுதீப் ஜோடியாக ‘மானிக்யா’ படத்தில் நடித்தவர். பூர்வீகம் சிக்மகளூர், பொறியியல் படிப்பு, முப்பையில் நடிப்புப் பயிற்சி, பார்த்ததுமே பச்சக்கென்று மனதில் ஒட்டிக்கொள்ளும் அழகு என ரன்னாகிறது ரன்யாவின் பயோடேட்டா. சரி, எதற்கு இத்தனை பீடிகை என்கிறீர்களா? தமிழில் ஒரு ரவுண்ட் வரவேண்டும் என்ற ஆசையில் போட்டோ ஷூட் செய்து கோடம்பாக்கத்தில் பரப்பிக்கொண்டிருக்கிறது இந்தக் கிளி.

கமல் இப்போது நெல்லைத் தமிழ் கற்றுக்கொண்டு வருகிறார். ‘த்ரிஷ்யம்’ தமிழ் ரீமேக்கிற்காகத்தான் இந்த டியூஷன். மலையாளத்தில் இயக்கிய ஜீத்து ஜோசப்பே தமிழிலும் இயக்குகிறார். ‘பாபநாசம்’ என பெயரிடப்பட்டுள்ள படத்தில் கமலின் மனைவியாக நடிக்கிறார் கௌதமி.  

‘கோரிப்பாளையம்’ நாயகி ஸ்வஸ்திகாவுக்கு அடுத்தடுத்து வந்த படங்களில் கிராமத்துப் பின்னணியில் ஹோம்லி வேடம்தான் சிக்கியது. இதை மாற்றுவதற்காக மாடர்ன் லுக்கில் போட்டோ ஷூட் எடுத்தவருக்கு கைமேல் பலன் கிடைத்துள்ளது. ‘பண்டுவம்’ உள்ளிட்ட சில படங்களில் நகரத்துப் பெண்ணாக நடித்துவருகிறார்.

* மோகன்லாலுக்கு சின்னதாக சௌகரியக் குறைவு. இங்கே மாதிரி இல்லாமல் அங்கே முதல் விசிட் மம்முட்டிதான். ‘‘எப்படியிருக்கு, சொல்லுப்பா’’ என்று இரண்டு மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்கே வந்து சேர்ந்துவிட்டார். கலகலவென சிரித்துப் பேசித் தேற்றிவிட்டுக் கிளம்பினார். இங்கேயெல்லாம் அப்படி நடக்கிறதா?

* செல்வராகவன் இப்போது இரண்டு குழந்தைகளுடன் கொஞ்சம் விடுமுறை அனுபவிக்கிறார். அதனால் உடல்நிலையும் தேறியிருக்கிறது. தனுஷ் கேட்டுக்கொண்டதற்கு இணங்கத்தான் இந்த விடுமுறை. செப்டம்பரில் புது ஸ்கிரிப்ட் கை வைக்கிறார். ‘இரண்டாம் உலகத்தி’லிருந்து மீண்டு வந்துவிட்டார் போல.

பத்து நாட்கள் ஓய்விற்கு பிறகு மீண்டும் பரபரப்பில் ஆழ்ந்துவிட்டது ‘லிங்கா’ யூனிட். கர்நாடகாவில் போடப்பட்டுள்ள அணை செட்டிங்கில் தொடர்ந்து ஒரு மாதம் படப்பிடிப்பை நடத்தத் திட்டமிட்டுள்ளார் இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார். ரஜினியின் கெட்டப் ரகசியம் கசிந்துவிடாமல் இருக்க, படப்பிடிப்பு தளத்தைச் சுற்றி பலத்த பாதுகாப்பு வளையம் அமைக்கப்
பட்டுள்ளது.

* நடிகைகளில் ஸ்ருதி ஹாசனுக்குத்தான் டாட்டூ மோகம் அதிகமாக இருக்கிறது. வலது இடது முதுகுப்புறங்களில் தனது பெயரை வரைந்துகொண்ட ஸ்ருதி, இரண்டு கைகளிலும் ஒரு காலிலும் டாட்டூ குத்தியிருக்கிறார். இன்னும் ஒன்று சேர்த்தால் கணக்குக்கு அரை டஜன் இருக்குமே மேடம்!

* இரட்டை வேடம், இதுவரை போடாத கெட்டப் என தான் இயக்கும் ‘கிட்ணா’ படத்தில் அமலாபாலுக்கு மிகப்பெரிய இடத்தைக் கொடுத்திருந்தார் சமுத்திரகனி. காதலில் விழுந்திருந்த அமலாபால், வேக வேகமாக கல்யாணமும் செய்து கொண்டார். கோடிட்ட இடத்தை யாரை வைத்து நிரப்புவது என சமுத்திரகனி யோசித்த நேரத்தில், ‘‘எனக்கு அந்த வாய்ப்பைப் கொடுங்களேன்’’ என ஒட்டிக் கொண்டுள்ளார் தன்ஷிகா.

* சூர்யாவும், விஜய்யும் பெரிய நட்பில் இல்லை என்று பேசிக்கொள்கிறார்கள். ஆனால், அதில் உண்மையில்லை. திடீரென்று எந்த ஹோட்டலிலிருந்தும் கதவைத் திறந்து கொண்டு வெளிப்
படுகிறார்கள். டீஸர், டிரெய்லர் படம் பற்றிய விவரங்களை உடனே பகிர்ந்து கொள்கிறார்கள். படங்கள் முடிந்த வரை மோதாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நண்பேன்டா...