ஜோக்ஸ்



‘‘சரக்கு சரியில்லைன்னு எல்லாம் பார் கவுன்சில்ல புகார் பண்ண முடியாது தலைவரே. கொஞ்சம் சும்மா இருங்க!’’
- அ.ரியாஸ், சேலம்.

‘‘குற்றப் பத்திரிகையைப் படிச்சுட்டு தலைவர் என்ன சொன்னார்..?’’
‘‘நிறைய தப்பு இருக்காம். நல்ல புரூப் ரீடர் வேணும்ங்கறார்!’’
- அம்பை தேவா, சென்னை-116.

ஆபரேஷன் பண்ணும்போது டாக்டருக்கு கை பயங்கரமா நடுங்குதே... ஏன்?’’
‘‘அவர் ஆபரேஷன் தியேட்டருக்குள்ளே வரும்போது எவனோ ஒருத்தன், ‘கத்தியை எடுத்தவனுக்கு கத்தியாலதான் சாவு’ன்னு சத்தம் போட்டுச் சொன்னானாம்!’’
- கே.லக்ஷ்மணன், திருநெல்வேலி.

.பி.ஐ. அதிகாரிங்க, மாப்பிள்ளை வீட்டுக்காரங்க மாதிரி பேசறாங்களா... எப்படி?’’
‘‘தலைவர் அவங்களை சாப்பிடச் சொன்னப்ப... ‘ரெய்டை முடிக்காம கையை நனைக்க மாட்டோம்’னு சொல்றாங்களே!’’
- பர்வீன் யூனுஸ், சென்னை-44.

‘‘மாப்பிள்ளை பையன் சரியான பொறுக்கி போலிருக்கு...’’
‘‘எப்படிச் சொல்றே..?’’
‘‘பொண்ணு பார்க்க பஸ் ஸ்டாண்டுக்கு வரச் சொல்றான்...’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

என்னதான்
நெருப்புக்
கோழினாலும்
அதுவும்,
எல்லாக்
கோழிகள்
மாதிரிதான்
முட்டை போடும்.
அது மட்டும்
அவிச்ச
முட்டையா
போடப்
போகுது?
- நெருப்புக்
கோழியைப் பிடித்து
பீடி பத்த வைப்போர் சங்கம்
- ஜி.தாரணி, அரசரடி.