வலைப்பேச்சு




facebook


சிறகுகள் வளர்வது நீங்கள் முறிப்பதற்காக அல்ல; அவை பறப்பதற்காக.
 மஞ்சுபாஷினி ஜெகதானந்தன்

ஹூசைனி நல்ல கராத்தே மாஸ்டர்னு கேள்விப்பட்டிருக்கேன். நடிப்புல கமலையே மிஞ்சிடுவார்னு இப்பதானே தெரியுது!
- மன்னை முத்துக்குமார்

தன்னையறியாது உதிரும் வார்த்தைகள் பல சமயம் தோள்களில் மாலைகளாகவும்; சில சமயம் காலடி யில் மலர் வளையமாகவும்.
- தேனம்மை லஷ்மண்

விதைத்த கற்களையெல்லாம் வீடுகளாய் விளைவித்து நல்ல மகசூல் கொடுத்துக்கொண்டிருக்கிறது தன் கடமை மறவாத முன்னாள் வயல்.
- சாந்தி மாரியப்பன்

தவறவிட்ட மைக்குடுவையிலிருந்து சிதறிய சொற்களை எங்கு சென்று பொறுக்கியெடுக்க?
- ஈரோடு கதிர்

2016ல் காங்கிரஸ் ஆட்சி லட்சியம்; குஷ்புவுக்கு அமைச்சர் பதவி நிச்சயம்: ஈவிகேஎஸ் இளங்கோவன்
# விக்கிரமன் சார் படத்தில கூட வராத சீனா இருக்கே!
- வாசு முருகவேல்

2016 தேர்தலில் காங்கிரஸ்தான் பெரிய கட்சியாக இருக்கும்: இளங்கோவன்
# அட, கடைசில நமீதா சேர ஒத்துக்கிட்டாங்க போல...
- நாகராஜ் நடராஜ்

மூழ்கி இறக்காமல் மிதக்கின்றன கழற்றி எறிந்த முகமூடிகள்
- ராஜா சந்திரசேகர்

‘‘போகும்போது என்னத்த கொண்டு போகப்போறோம்’’னு அடிக்கடி சொல்லிக்கிட்டே, அடுத்தவங்க பொருளுக்கு ஆசைப்படுறவங்க நிறைய பேர் இருக்காங்க...
- வெ பூபதி

‘‘எங்களால் ஆனதை செஞ்சிட்டோம்... இனி கடவுள்தான் காப்பாத்தணும்’’ என்ற இன்டன்சிவ் கேர் யூனிட் மருத்துவர்தான் நினைவுக்கு வருகிறார், தினம் தினம் பால்காவடி, மண்சோறு, சிலுவைப் பிரார்த்தனைகளைக் காணும்போது!
- மன்னை முத்துக்குமார்

‘ஸ்வீட்ஸ் சாப்பிடும்போது ரொம்ப கவனமாக இருக்கணும்’னு டாக்டர் சொல்வது எவ்ளோ உண்மை... கீழ விழுந்த ரிமோட்ட குனிஞ்சு எடுப்பதற்குள் என் தட்டுல இருந்த லட்டை தூக்கிட்டாங்களே!
# லட்டு போச்சே?
- செல்லி சீனிவாசன்

நகைக்கடையில எப்போ கூலிங்கா ஜூஸ் கொடுக்கிறாங்களோ, அடுத்து பின்னாடியே ஹாட்டா பில் வரப்போகுதுன்னு நாமளே புரிஞ்சிக்கணும்!
- தடாகம் முகுந்த்

பெங்களூரு: பொய் வழக்கு என்று திரும்பத் திரும்பக் கூற வேண்டாம், ஆதாரமில்லாமல் வாதாடாதீர்கள்... வக்கீலிடம் நீதிபதி கண்டிப்பு
# இன்னும் அந்த வக்கீல் வண்டு முருகனை மாத்தலையா?
கார்ட்டூனிஸ்ட் முருகு

ஒற்றையடியாய் நீளும் பாதை சிலந்தி வலையாய் உன்னைச் சுற்றியே...
- சுந்தரி விஸ்வநாதன்

ஒவ்வொரு ஆளற்ற ரயில் நிலையத்தின் ஒவ்வொரு அனாதை சிமென்ட் பெஞ்சுக்கும் பேச்சுத் துணை கொடுக்க ஒரு பரட்டைத் தலை பைத்தியக்காரன் இருக்கிறான்!
- போகன் சங்கர்

twitter

@umakrishh
கள்ளச் சாராயம் காய்ச்சினவனைத் தூக்கிப் போட்டு மிதிச்ச ஹீரோவிலிருந்து, சாராயக்கடையிலேயே விழுந்து கிடக்கும் ஹீரோவாக மாறியதே தமிழ் சினிமாவின் வளர்ச்சி!

@renganathank
ஒருவன் கெட்டவன் எனத் தெரிந்தால் அவனை சோதித்துப் பார்க்க விரும்பாத இந்த சமூகம், நல்லவன் என்றால் ஒவ்வொரு முறையும் பரிசோதனைக்கு உட்படுத்துகிறது!

@its_prasadism
 ‘தயவுசெய்து’ எனக் கூறும்போது எழும் தன்மான உணர்வு ‘ப்ளீஸ்’னு சொல்லும்போது எழுவதில்லை!
# அந்நிய மொழி

@2amtughluq   
நடிகர்களை முதல்வர் ஆக்கியது போதும். இனி ஒரு மருத்துவரை முதல்வர் ஆக்குங்கள்: அன்புமணி
# பெருந்தன்மை யானவர்... டாக்டர் கிருஷ்ணசாமிக்கு ஓட்டு கேக்குறார்!

@Corp_Tshirt
இளநீர் 5 ரூபாய் அதிகம்னா அங்கலாய்ப்பா இருக்கு, அதுவே கூலிங் பீருக்கு 20 ரூபாய் குடுக்க தயாரா இருக்கோம்.
எங்க போகுது இந்த கேடு கெட்ட உலகம்!!!

@teakkadai
லிங்கா பிரச்னை, விநியோகஸ்தர்ல தொடங்கி இப்போ ரசிகர் மன்ற ஷோ வரைக்கும் போயிடுச்சு. திருட்டு டிவிடிக்காரர்கள்தான் இன்னும் பாக்கி.

@mekalapugazh   
காந்தியைச் சுட்டதும் சரி... தெரசாவின் சேவை தேவையில்லாதது... அடுத்தது யார்? புத்தர்தானே!

@writernaayon
ஹுசைனி: மதர், உங்களுக்காக இன்னும் என்ன வேணாலும் செய்ய காத்திருக்கேன்.
மதர்: ஆணியே புடுங்க வேணாம்.ஹுசைனி: அய்யோ!

@RavikumarMGR
இன்று அம்மாவின் பிறந்த நாளென்பதை அறிந்து நேற்றே ஆஸ்கார் விழாவை நடத்தி விட்டார்கள்!
# எத்தனை நடிகருக்குத்தான் விருது குடுக்க முடியும்!

 @Michael_selvam 
ஹுசைனி தம்பி... ஏதோ மண் சோறு, காவடி, தீச்சட்டின்னு பொழப்பை ஓட்டிக்கிட்டு இருக்கோம். எங்க பொழப்புல ஆணி அடிச்சிடாத ராசா!

 @urs_priya 
 சென்ற தலைமுறையினரின் ‘அடிக்கடி கண்ணாடி பார்க்கும்’ நோய் இந்த தலைமுறையினரிடம் ‘செல்ஃபி எடுத்துக் கொள்ளும்’ நோயாக பரிணாம வளர்ச்சி பெற்றுள்ளது!

@GOVINDARAJEN 
 சென்னை விமான நிலையத்தில் 34வது விபத்து: இம்முறை மேற்கூரை # செத்து செத்து வெளாடுது இந்த ஏர்போர்ட்டு...

@Aarthiism   
அப்பாவைப் போல கணவன் இல்லையே என வருந்தும் பலருக்குத் தெரிந்திருக்காது, தன் அம்மாவுக்கும் அதே ஆசை இருந்திருக்கக் கூடுமென்று!

@ManiBE5    
இந்த ஹிந்திக்காரனுக நம்ம ஊர்ல வந்து அடகுக்கடை வைக்கிறானுங்க, அணு உலை வைக்கிறானுங்க... எக்ஸ்ட்ரா ஒரு பானி பூரி கேட்டா வைக்க மாட்றானுங்க...

@nilapennukku
இனப்படுகொலை என்பது சிக்கன் பிரியாணி சாப்பிடும்போது கூடவே ஒரு முட்டையையும் சேர்த்துச் சாப்பிடுவது!