ஜோக்ஸ்



‘‘டாக்டர்... என் கணவர் தெரியாம சிம்கார்டை
முழுங்கிட்டாரு!’’
‘‘பேச முடியுதா?’’
‘‘பேச முடியும் டாக்டர்... பேலன்ஸ் நிறைய இருக்கு!’’
- வி.சாரதி டேச்சு, சென்னை-5.

‘‘தான் காலில் அணிந்திருக்கும் சாக்ஸையும் கழற்றி
அம்பயரிடம் கொடுத்து, அந்த துர்நாற்றத்தில் அவரை செய
லிழக்கச் செய்யும் எதிர் அணி பௌலரின் தந்திரத்தை வன்மையாக கண்டிக்கிறோம்!’’
- எஸ்.ராமன், சென்னை-17.

‘‘டாக்டர்! பில்லுல எக்ஸ்ட்ரா சார்ஜ்னு நூறு ரூபாய் எதுக்கு போட்டிருக்கீங்க..?’’
‘‘நர்ஸ் கூட சேர்ந்து செல்ஃபி எடுத்தீங்களே... அதுக்குத்தான்!’’
- வி.சகிதா முருகன், தூத்துக்குடி.

‘‘இதோட முப்பதாவது தடவையா நீதிமன்றத்துக்கு வந்திருக்கே... உனக்கு 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கிறேன்...’’
‘‘ரெகுலர் கஸ்டமருக்கு தள்ளுபடி இல்லையா எசமான்?’’
- ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.

‘‘போலீஸ் ஸ்டேஷன் வாசல்ல பறக்கும் தட்டு நிற்குதே... ஏன்?’’
‘‘வேற்று கிரக காதல் ஜோடி ஒண்ணு வந்து
கல்யாணம் பண்ணி வைக்கச் சொல்லுதாம்!’’
- அனார்கலி, தஞ்சாவூர்.

நாட்டுக்கோழியை நாட்டுல வளர்க்கலாம். அதுக்காக வான்
கோழியை வானத்துல வளர்க்க முடியுமா? இல்ல, தீக்கோழியை தீயிலதான் வளர்க்க முடியுமா?
- ஜி.தாரணி, மதுரை.

என்னதான்
ஒட்டகச்சிவிங்கி
மேலே ஒட்டடை படிந்திருந்தாலும் அதை ஒட்டகச் சிவிங்கின்னுதான் சொல்லணும். ஒட்டடைச் சிவிங்கின்னு சொல்ல முடியாது!
- ஒல்லிக்குச்சிப் பெண்களைப் பார்த்துவிட்டு தத்துவம் யோசிக்கும் ஓமக்குச்சி
நரசிம்மன் குரூப்ஸ்
 ஏ.எஸ்.யோகானந்தம், ஔவையார்பாளையம்.