நியூஸ் வே



மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜிக்கு ஓரளவு ஓவியம் வரையத் தெரியும். அவர் தயவு தேவைப்படும் பலரும் ஓவியங்களை போட்டி போட்டு வாங்குகிறார்கள். ‘‘எனது 300 ஓவியங்கள் 9 கோடி ரூபாய்க்கு விற்றிருக்கின்றன.

நான் ஒரு கேன்வாஸில் மூன்று கோடுகள் போட்டாலே அதை 10 லட்ச ரூபாய்க்கு வாங்க போட்டி போடுகிறார்கள். என் திறமையைப் பார்த்து பலருக்கும் பொறாமை’’ என ஒரு பேரணியில் எதிர்க்கட்சிகளைத் திட்டினார் அவர். ‘‘ ஒரு ஓவியத்தை ரூ.1.80 கோடிக்கு வாங்கியவர்தான், மோசடிக்காக கம்பி எண்ணிக்கொண்டிருக்கும் சாரதா சிட்பண்ட் அதிபர் சுதிப்தா சென்’’ என சிரிக்கிறார்கள் எதிர்க்கட்சியினர்.

சூர்யா, சமந்தா நடித்து வரும் சயின்ஸ் ஃபிக்‌ஷன் த்ரில்லரான `24’ படத்தின் முதல் ஷெட்யூல் ஷூட்டிங் மும்பையில் நடந்து முடிந்திருக்கிறது. சூர்யா தயாரித்து வரும் இப்படத்தில், கிராஃபிக்ஸ் காட்சிகள் தூக்கலாம்.

‘ஜில்லா’ படத்தை தெலுங்கில் எடுக்க முயன்றார்கள். மோகன்லால் ரோலுக்கு ஆள் கிடைப்பது கஷ்டமாகிவிட்டது. அதனால் அதையே டப்பிங் செய்து, பிரம்மானந்தம் காமெடி மட்டும் சேர்த்து மொழி மாற்றப் படமாகவே ‘ஜில்லா’ வெளியாகிறது. சிவன்லு + சக்திலு = வசூலு?

`காஞ்சனா2’ மாஸ் ஹிட்டால் செம குஷியில் இருக்கிறார் டாப்ஸி. இனி தமிழில் தொடர்ந்து கவனம் செலுத்தும் ஐடியாவில்
இருக்கிறது பொண்ணு!

வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் படத்தில், தனுஷின் அம்மா நம்ம ராதிகா. ஹீரோயின்களாக சமந்தா, எமி நடிக்கும் இப்படத்தின் ஷூட்டிங், சமீபத்தில் ஒரு பள்ளிக்கூடத்தில் நடந்திருக்கிறது. `இந்த ஸ்கூல்லதான் நான் டென்த் படிச்சேன்’ என ஃப்ளாஷ்பேக்கில் மூழ்கிய தனுஷ், அங்கே தனது வகுப்பறைக்குச் சென்று சிறிது நேரம் செலவழித்து நெகிழ்ந்திருக்கிறார்.

அடுத்த மாதம் கமல், ஜோதிகா, ஆர்யா, சந்தானம் என எல்லோரது படங்களும் ரிலீஸ். தியேட்டர் கிடைக்காமல் திணறிக் கொண்டிருக்கிறார்கள். எப்பவோ ரெடியான ஜெயம் ரவியின் ‘பூலோகம்’ மட்டும் அப்படியே இருக்கிறது. பூலோகத்தில் எங்கேயுமா இடமில்லை..?

மே 1ம் தேதி சூர்யா-ஜோதிகா குழந்தைகளோடு வெளிநாடு போகிறார்கள். இனி வருடா வருடம் மே மாதம் முழுக்க நடிக்காமல் குழந்தைகளோடு மகிழவிருக்கிறார்களாம்!

ஏ.எல்.விஜய் படத்தை முடித்துவிட்டார் விக்ரம் பிரபு. அடுத்து அவர் `வாஹா’ படத்தின் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் செல்கிறார்.

அட்சய திருதியை அன்று தனது தங்க நகை வெப்சைட்டான வொயிட் அண்ட் கோல்டை ஜொலி ஜொலிக்க வைத்திருக்கிறார் தமன்னா. இதைப் பார்த்து ரசித்த காஜல் அகர்வால், உடனடியாக `ஆல் தி பெஸ்ட் மை டார்லிங் தமி..’ என ஃபேஸ்புக் கமென்ட் போட்டு, தமன்னாவை குஷிப்படுத்திவிட்டார். தங்கமான நட்பு!

‘உலகில் சூரிய சக்தியால் ஒளிரும் முதல் கிரிக்கெட் மைதானம்’ என்ற பெருமையைப் பெற்றிருக்கிறது பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானம். சூரிய சக்தி தகடுகளை நிறுவி 400 மெகாவாட் மின்சாரம் தயாரிக்கும் மின் நிலையம் ஒன்றை அமைத்திருக்கிறார்கள் இங்கு!

‘புலி’ படத்தின் ஸ்டில்கள் வெளியானதில் யூனிட்டே செம கடுப்ஸ்! விஜய்யே நேரடியாக விசாரணையில் இறங்கியும் யார் வெளியிட்டார்கள் என்பது தெரியவில்லையாம். இதனால் எக்கச்சக்க கட்டுப்பாடுகள் வந்து, விருந்தினர்களுக்கு அனுமதி இல்லாமல் செய்துவிட்டார்கள்.

சில மாதங்களுக்கு முன்பு, `இனி நோ நடிப்பு, ஒன்லி படிப்பு’ என முடிவெடுத்த லட்சுமி மேனனை `கொம்பன்’ ஹிட் மறு
படியும் கோலிவுட் பக்கம் கொண்டு வந்திருக்கிறது. ஜெயம் ரவியுடன் ஒரு படம், அடுத்து அஜித் படம் என லட்சுமி மேனன் இப்போ செம பிஸி. இப்போ லீவுதானே பேபி!

அமெரிக்க பாராளுமன்ற உறுப்பினராக இருக்கும் இந்தியப் பெண் துள்சி கப்பார்ட், இந்திய மரபுப்படி திருமணம் செய்துகொண்டிருக்கிறார். ஹவாய் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான துள்சி, அங்கு வசிக்கும் இந்திய வம்சாவளி ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் வில்லியம்ஸை மணந்தார். ஹவாய் தீவில் நடந்த திருமணத்தில் புடவை, மங்கல இசை என இந்திய அடையாளங்கள் மிஸ்ஸிங் என்றாலும், வேத மந்திரங்கள் முழங்க இருவரும் திருமணம் செய்துகொண்டனர். 

எல்லோரும் சம்மருக்கு வெளிநாடு பறக்கிறார்கள். திருமணமாகி  வெளிநாட்டில் செட்டில் ஆன கோபிகா, தன் கணவர் டாக்டர் அஜிலேஷ், மகள் எமி, மகன் எய்டன் ஆகியோருடன் கேரளாவில் உள்ள தன் வீட்டிற்கு
வந்திருக்கிறார்!

பல மணி நேரத்துக்கு மாரத்தான் மீட்டிங்குகளை நடத்துவதில் பெயர் வாங்கி விட்டார், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ். சமீபத்தில் சுகாதாரத் துறை கூட்டம் ஒன்றை ஒரு நிமிட இடைவேளைகூட விடாமல் 7 மணி நேரம் நடத்தினார். அவசரத்துக்கு டாய்லெட் போகக்கூட முடியாமல் அவதிப்படும் அதிகாரிகள், இப்போதெல்லாம் மீட்டிங் என்றால் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.

விஜய்யின் `புலி’யில் நடித்திருக்கிறார் காமெடி நடிகை வித்யுமோகன். ``சிம்புதேவன் சாரும், விஜய் சாரும் எனக்கு இந்த வாய்ப்பைக் கொடுத்தாங்க. விஜய் சாரோட நடிச்சது என்னோட பெஸ்ட் எக்ஸ்பீரியன்ஸ்!’’ என வாயெல்லாம் பல்லாகச் சொல்கிறார் வித்யு.

சூர்யாவோடு ‘மாஸ்’ முடித்துவிட்டு, விஜய்யை வைத்து ஒரு படம் பண்ணிவிட வேண்டும் என்பதே இப்போதைக்கு வெங்கட்பிரபுவின் டார்கெட். விஜய்க்காக ஒரு கதையை ரெடி பண்ண, முழு மூச்சில் இறங்கியிருக்கிறார் அவர்.
எ வெங்கட் பிரபு
தளபதி..?

மிஷ்கின், சரத்குமார், பி.சி.ராம் சேர்ந்த டீம் எடுக்கிற படம் ஒரு பெரிய போலீஸ் ஆபீஸர் பற்றிய கதையாம். ஸ்கிரிப்ட், கேமரா கோணங்கள், பாடல்கள் வரை ரெடி பண்ணிவிட்டுத்தான் படத்தை ஆரம்பிக்கிறார்கள். மூன்றே மாதத்தில் ஷூட்டிங் முடிக்க திட்டம். கூட்டணி ஆஃப் தி இயர்!

விஜய்-விக்ரம் இருவரையும் வைத்து ஒரு படம் பிளான் செய்கிறார் ஷங்கர். விக்ரம் வெளிநாட்டிலிருந்து திரும்பியதும் அவருக்கு கதை சொல்வார்களாம். டபுள்ஸ் ட்ரீட்!

‘அலெக்ஸ் பாண்டியனி’ல் கார்த்தியுடன் ஜோடி சேர்ந்த நிகிதா, மீண்டும் கன்னட திசை நோக்கி பறந்தார். இப்போது விஷாலுடன் `பாயும் புலி’யில் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட ரிட்டர்ன் டிக்கெட்டோடு வந்து போயிருக்கிறார். பட்சி இங்கேயே நிக்கிதா பாருங்களேன்!