சுதாகரனுக்கு பயமாகவும், தயக்கமாகவும் இருந்தது. காரணம், கையில் இருந்த அந்த லெட்டர். மேனேஜர் விமலாவிடம் இதை எப்படிக் கொடுப்பது?இருபத்தைந்து வயதுதான் இருக்கும் விமலாவுக்கு. இன்னும் திருமணமாகவில்லை.
நல்ல அழகி. ஆனால் பயங்கர கோபக்காரி!‘‘பார்த்துடா, ஏற்கனவே எங்க செக்ஷன்ல இருந்த விநாயக்கும் ரமேஷும் இப்படித்தான் அவசரப்பட்டு லெட்டரைக் கொடுத்து வமானப்பட்டுட்டாங்க. நாலு பேர் முன்னால கண்டபடி திட்டிடுச்சாம் அந்தப் பொண்ணு!’’ - கிட்டத்தட்ட பயமுறுத்தினான் நண்பன் கணேஷ்.
பதற்றத்தோடு மேனேஜர் விமலாவின் அறைக் கதவை தட்டித் திறந்தான் சுதாகரன். ‘நல்லவேளை... யாரும் இல்லை... திட்டினா கூட யாருக்கும் தெரியாது...’ ஒரு பக்கம் நிம்மதியாக இருந்தாலும் இன்னொரு பக்கம் பயமாகவும் இருந்தது. கடிதத்தை படித்துவிட்டு நிமிர்ந்தாள் விமலா.
‘‘வெரிகுட் மிஸ்டர் சுதாகரன்... ஆபீஸ் லெட்டரை எந்த வெர்பல் மிஸ்டேக்கும் இல்லாம டைப் பண்ணி இருக்கீங்க. கேபிடல் லெட்டர்ஸ், ஃபுல்ஸ்டாப், செமிகோலன் எல்லாம் சரியா இருக்கு. இதைத்தான் எதிர்பார்த்தேன். போன வாரம் விநாயக்கும் ரமேஷும் தயார் பண்ண லெட்டர்ல எவ்வளவு மிஸ்டேக்ஸ் தெரியுமா? தெளிவும் இல்ல! எழுத்துப்பிழை வேற. கோபத்துல கண்டபடி திட்டிட்டேன். பட் ஐ லைக் யுவர் லெட்டர்..!’’
‘அப்பாடா’ என்றிருந்தது சுதாகரனுக்கு.
கே.ஆனந்தன்