எஞ்சினியரிங் பட்டதாரிகளுக்கு ONGC-ல் வேலை! 908 பேருக்கு வாய்ப்பு!



* வாய்ப்பு

ஓ.என்.ஜி.சி. என்று சுருக்கமாக அழைக்கப்படும் எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகத்தின் கிளை நிறுவனங்கள் நாடு முழுவதும்  பல்வேறு இடங்களில் செயல்பட்டுவருகின்றன. இந்த நிறுவனங்களில் தற்போது ஏராளமான பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு  வெளியாகியுள்ளது. குஜராத் மாநிலம் மேற்கு மண்டல ஓ.என்.ஜி.சி. கிளையில் 737 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. ஏ1, ஏ2 லெவல்  மற்றும் டபுள்யு 1 லெவல் பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. அசிஸ்டன்ட் டெக்னீசியன், அசிஸ்டன்ட் (டிரான்ஸ்போர்ட், மெட்டீரியல்  மேனேஜ்மென்ட்) செக்யூரிட்டி சூப்பிரவைசர், ஜூனியர் டெக்னிக்கல் அசிஸ்டன்ட், கிரேன் ஆபரேட்டர், ரிகர் போன்ற பணிகள் உள்ளன.

இதேபோல சென்னையைத் தலைமை இடமாகக் கொண்ட தெற்கு மண்டல கிளையில் அசிஸ்டன்ட் டெக்னீசியன், ஜூனியர் ஃபயர்மேன்  உள்ளிட்ட பணிகளுக்கு 86 பேரும், திரிபுரா கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேரும் தேர்வு செய்யப்பட உள்ளனர்.  மேற்குமண்டலக் கிளை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிகள்: சிவில், எலக்ட்ரிக்கல், இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல்,  பெட்ரோலியம் எஞ்சினியரிங், ஆட்டோமொபைல் உள்ளிட்ட பிரிவில் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.  இளநிலை அறிவியல், கலை பட்டப்படிப்பு படித்தவர்கள், கணினி அறிவு, தட்டச்சுத்திறன் பெற்றவர்களுக்கும் குறிப்பிட்ட பணியிடங்கள்  உள்ளன. 10-ம் வகுப்புத் தேர்ச்சி பெற்று குறிப்பிட்ட பிரிவில் பணித்திறன் பெற்றவர்களுக்கும் வேலைவாய்ப்புகள் உள்ளன.

அந்தந்தப் பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பார்க்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2019.  

தெற்கு மண்டலக் கிளை பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதிகள்: தெற்கு மண்டல கிளையில் 86 பணியிடங்கள் உள்ளன.  இன்ஸ்ட்ருமென்டேசன், மெக்கானிக்கல், சிவில் போன்ற பிரிவில் டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்கள், 10-ம் வகுப்பு படிப்புக்குப்பின்  குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்களுக்குப் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த பணிக்கான காலியிட விவரம், வயது வரம்பு,  கல்வித்தகுதி விவரங்களை https://www.ongcindia.com என்ற இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பம் சமர்ப்பிக்கவும். விண்ணப்பிக்க கடைசி நாள்: 20.2.2019.

இதேபோல திரிபுரா மாநிலம் அகர்தாலா ஓ.என்.ஜி.சி. கிளையில் நான்-எக்சிகியூட்டிவ் பணிக்கு 85 பேர் தேர்வுசெய்யப்பட உள்ளனர்.  டிப்ளமோ எஞ்சினியரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி நாள்: 19.2.2019.

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://www.ongcindia.com என்ற இனையதளம் மூலம் விண்ணப்பிக்க  வேண்டும். பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.370 செலுத்தி விண்ணப்பிக்கலாம். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர்  மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்கள் இந்தக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை. கணினி அடிப்படையிலான தேர்வு  வருகிற மார்ச் மாதம் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான விவரங்களை அறிய https://www.ongcindia.com என்ற இணையதளத்தைப் பார்க்கவும்.