*நீங்கள் இன்று சாப்பிடும் ஆப்பிள், 6 மாதங்களுக்கு முன் பறிக்கப்பட்டது!
*ஒரு மனிதன் சுறாவால் கொல்லப்படுவதை விட, பசுவினால் கொல்லப்படுவதற்கு 22 மடங்கு சாத்தியங்கள் அதிகம்.
*ஒவ்வொரு நிமிடமும் கூகுளில் 20 லட்சம் தேடல்கள் நிகழ்கின்றன.
*மனிதர்கள் காதல் வயப்படும்போது மூளையில் சுரக்கும் அதே வேதிப் பொருள், நாய்களுக்கும் சுரக்கிறது - அவற்றின் எஜமானர்களைக் காணும்போது!
*பறவையின் டி.என்.ஏ.வைப் பயன்படுத்தி, டைனோசர்களை மீண்டும் பிறக்கச் செய்வது, அறிவியல் ரீதியாகச் சாத்தியம்!
*கார்ன்ஃப்ளேக்ஸில் வைட்டமின் மற்றும் இரும்புச்சத்து ஆகியவை செயற்கையாகவே சேர்க்கப்படுகின்றன.
*பூசணம் பூத்த ரொட்டிகளில் காணப்படும் பூஞ்சைகளில், உயிர் பறிக்கும் வகையும் உண்டு!
*‘தூங்கும் முன்பும், விழித்த உடனேயும் அரை கிளாஸ் தண்ணீர் குடிப்பவர்களால் தாங்கள் கண்ட கனவுகளில் பலவற்றை நினைவு கூற முடியும்’ என்பது ஒரு மனோதத்துவ ஆய்வு முடிவு!
*குழந்தை கருவில் இருக்கும்போது அதன் தாய் உண்ணும் உணவின் அடிப்படையிலேயே, குழந்தையின் ருசி உணர்வு அமைகிறது.