அமெரிக்காவின் துப்பாக்கி ஆராய்ச்சி!



கடந்த அக்.1 இல் லாஸ்வேகாஸில் ஸ்டீபன் படோக் நிகழ்த்திய துப்பாக்கிச் சூட்டில் 59 பேர் பலியாயினர். அமெரிக்க வரலாற்றில் நிகழ்ந்த முக்கிய துயரநிகழ்வு இது. அமெரிக்காவில் மஞ்சள்காமாலை, ஹெச்ஐவி, மன அழுத்தம் ஆகிய நோய்களைக் கடந்து அதிக மக்கள் இறப்பது துப்பாக்கிச்சூட்டினால்தான். கடந்த 2014 ஆம் ஆண்டில் மட்டும் துப்பாக்கிச்சூடுகளால் 35,594 பேர் இறந்துள்ளனர்(Center for Disease Control and Prevention அறிக்கைப்படி). 2015 இல் 85 ஆயிரம் பேர் தாக்கப்பட்டுள்ளனர் இதில் பத்தாயிரம் பேர் சிறுவர்கள். பல்வேறு குற்றங்கள் போலீசிடம் ரிப்போர்ட் செய்யப்படாததால் அவற்றைக்  குறித்த பதிவுகளும்  காவல் துறையிடம் இல்லை.

The National Crime Victimization Surveyயின்படி 90 ஆயிரம் வீடுகளிலுள்ளவர்களின் தகவல்கள் சேகரிக்கப்பட்டு நம்பிக்கையளித்தாலும் 12 வயதுக்கும் குறைவானவர்கள் பற்றிய தகவல்கள் சேகரிக்கப்படாதது மைனஸ் பாய்ண்ட். அமெரிக்க அரசு, 1966 ஆம் ஆண்டு அமல்படுத்தப்பட்ட சட்டப்படி, துப்பாக்கி யைக் கட்டுப்படுத்தும் முறையில் காயம் ஏற்படுபவர்களுக்கு இழப்பீடு கிடையாது என்று கூறி 2.6 மில்லியன் டாலர்களை பட்ஜெட்டில் குறைத்துவிட்டது. 1996-2013 ஆண்டு காலத்தில்  துப்பாக்கி ஆராய்ச்சிக்காக ஒதுக்கப்பட்ட திட்டத்தொகை மெல்ல குறைக்கப்பட்டு ஏறத்தாழ  இன்று  96% தொகை கட் ஆகிவிட்டது.

CDC மட்டுமல்லாமல், NIH அமைப்பும் துப்பாக்கிஆராய்ச்சிக்கு பணம் வழங்கிக்கொண்டிருந்தது. ஒபாமா ஆட்சிக் காலத்தில் இவ்வமைப்பு  துப்பாக்கி கட்டுப்படுத்தல் தொடர்பான நிதிச்செயல்பாடுகளை முற்றிலுமாக நிறுத்திக்கொண்டுவிட்டது. தற்போது துப்பாக்கி வன்முறையால் பாதிக்கப்படுபவர்களுக்கு மட்டுமே உதவிகளை NIH வழங்கி வருகிறது.

- கா.சி.வின்சென்ட்