Mini முத்தாரம்



ராஷ்ட்ரிய கிசான் மகாசங்கம் எப்போது தோன்றியது?

அரசின் நிலச்சீர்திருத்த மசோதாவுக்கு எதிராக சண்டி கரில் திரண்ட அறுபது விவசாய சங்கங்களும் இணைந்து கிசான் ஏக்தா எனும் அமைப்பானது. ஹரிஷ் சௌகான் தலைமையில் பெங்களூரு, சிம்லா உள்ளிட்ட இடங்களில் மாநாடு நடந்தது. எதிர்கால 2019 தேர்தல் எங்களைப் பற்றி  உலகுக்கு சொல்லும். கடந்தாண்டு செய்த போராட்டங்களைப் பற்றிக் கூறுங்கள்.

2017 ஆம் ஆண்டு ஜனவரி 10-12 ஆகிய நாட்களில் போபாலில் போராட்டம் நடத்தினோம். 22 மாநிலங்களில் 290 தேசிய ஹைவேகளில் போராடுவதாக பிளான். மக்களுக்காக அதனை விலக்கிக்கொண்டு, 9-15 தேதி களில் ஜெயில் பாரோ அந்தோலன்  திட்டப்படி 45  ஆயிரம்  விவசாயிகள் பேரணி  நடத்தி  சுதந்திர தினங்களில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தோம். விரைவில் டெல்லியில் மெகா போராட்டங்கள் நடத்தஉள்ளோம்.

விவசாயிகளின் தற்கொலை அதிகரித்திருக்கிறதா?

மோடி ஆட்சியில் இந்திய விவசாயிகளின் தற்கொலை அளவு  43%.  மாநில அரசுகள் விவசாயிகளின் தற்கொலைகளை திட்டமிட்டு மறைக்கின்றன. அரசு கூறுவதைவிட இருமடங்கு தற்கொலைகள் நிகழ்ந்துள்ளது என்பதே உண்மை. கடன் தள்ளுபடி, குறைந்தபட்ச  உத்தரவாத விலை அதிகரிப்பு ஆகியவையே எங்களது கோரிக்கைகள்.-சிவ்குமார் ஷர்மா, ராஷ்ட்ரிய கிசான் மஸ்தூர் சங்கம்.