சிறை வேண்டாம்!



பெருவின் முன்னாள் அதிபர் ஆல்பெர்டோ ஃப்யூஜிமோரி மனித உரிமை மீறல் மற்றும் ஊழல் களில் ஈடுபட்டதால் 25 ஆண்டுகள் சிறைத் தண்டனைக்குள்ளானார். தற்போது உடல்நலம் குன்றியதால் பிணையில் வெளியே வந்தவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
உச்சநீதிமன்றம் விரைவில் அவர் சிறைதிரும்ப உத்தரவிட்டுள்ள நிலையில் ஃப்யூஜிமோரியின் ஆதரவாளர்கள் சிறைக்கு அனுப்பவேண்டாம் என்று அவரது வீட்டின்முன் போராடிய காட்சி!