ரோபோ நர்ஸ்



பாரீஸில் உள்ள ஒரு மருத்துவமனை. வயதான நோயாளிகளுக்காக ஒதுக்கப்பட்ட அறை பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கிறது. அந்த அறையில் இருந்து கேட்கும் சிரிப்பு சத்தத்தில் மருத்துவமனையே அதிர்கிறது. ஆனால், அங்கே ஒரு நர்ஸ் கூட இல்லை. அப்புறம் எப்படி இவ்வளவு பரபரப்பு என்கிறீகளா?

ஜோரா தான் இந்தப் பரபரப்புக்கு காரணம். ஒரு நொடி கூட ஓய்வில்லாமல் விளையாட்டு, ஆடுவது, அங்கே இங்கே ஓடுவது என்று நோயாளிகளை மருத்துவ மனையில் இருக்கிற ஒரு உணர்வே இல்லாமல் வைத் திருக்கிறாள். ஒரு பேரன், பேத்தி யைப் போல ஜோராவை அங்கிருக்கும் முதியவர்கள் கொண்டாடுகிறார்கள்.

முதியவர்களையும் குழந்தை களையும்  கவனிப்பதற்காக  பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட ஒரு ரோபோதான் ஜோரா. லேப்டாப் வழியாக ஜோராவின் செயல்பாடுகளை கட்டுப்படுத்த முடியும். அமெரிக்கா, பிரான்ஸில் மட்டும் ஆயிரக்கணக்கான ஜோராக்கள் மருத்துவமனைகளை சந்தோஷ கூடாரங்களாக மாற்றிக்கொண்டிருக்கின்றன. ‘‘என்ன இருந்தாலும் ஒரு மனிதனின் வெதுவெதுப்பான அரவணைப்பை ரோபோக்களால் தர முடிவதில்லை...’’ என்கிறார் ஒரு முதிய நோயாளி.