அரிய நிகழ்வு



அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாகாணத்தில் உள்ளது டர்ஹம் நகரம். அங்குள்ள  செடிகளில் ஆயிரக்கணக்கான மலர்கள் பூத்துக்குலுங்குகின்றன. அந்த மலர்களிலிருந்து வெளியேறிய மகரந்தத் தூள்கள் காற்றில் பரவி டர்ஹம் நகரமே பச்சைப் பசேலென காட்சியளிக்கிறது. இந்த அரிய நிகழ்வை புகைப்படமாக்கி இணையத்தில் தட்டிவிட்டு வைரலாகிவிட்டார் ஜெர்மி கில்கிறிஸ்ட்.