அதிசய தோட்டம்



துபாயின் அடையாளமா கவே மாறிவிட்டது ‘துபாய் மிராக்கிள் கார்டன்’. 25 கோடி செடிகளுடன் 50 கோடிக்கும் அதிகமான மலர்களுடன் பூத்துக்குலுங்கும் அதிசய மலர்த் தோட்டம் இது. 2013-ம் வருடம் காதலர் தினத்தன்று திறக்கப் பட்ட இந்தத் தோட்டத்தின் பரப்பளவு மட்டுமே 72 ஆயிரம் சதுர மீட்டர்.

வெயில் சுட்டெரிக்கும் இடத்தில் இப்படி ஓர் இடமா என்று பார்ப்பதற்காகவே லட்சக்கணக்கானோர் இங்கே படையெடுக்கின்றனர். அத்துடன் பாலிவுட் சினிமாக்காரர்கள் டூயட் பாடல்களை எடுக்க இந்த மலர்த்தோட்டத்தை புக் செய்து காத்திருக்கின்றனர். இதற்குள் நுழைய தனிக்கட்டணம்  வசூலிக்கப்படுகிறது.