வைரல் சம்பவம்



தாய்வானின் யிலன் கவுண்டியில் உள்ளது நன்ஃபேன்கவோ பாலம். பாலத்தின் கீழ் நதி பாய்கிறது.  ஒற்றை வளைவுள்ள ஸ்டீல் பாலம் இது. 140 மீட்டர் நீளமுள்ள இந்தப் பாலம் 1998-இல் கட்டிமுடிக்கப்பட்டு கடந்த வாரம் வரை செயல்பாட்டில் இருந்தது. ஆம்; அக்டோபர்  ஒன்றாம் தேதி இந்தப் பாலம் உடைந்து தண்ணீரில் மூழ்கிவிட்டது. பாலம் உடைவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு இலேசான நில அதிர்வு ஏற்பட்டிருக்கிறது.

தவிர, சூறாவளிக் காற்றும் அந்தப் பகுதியில் வீசியிருக்கிறது. ஆயில் ஏற்றிக்கொண்டு சென்ற டேங்கர் லாரி, பாலம் உடையும் போது செல்ல, அதிலிருந்தவர்கள் காயமடைந்துள்ளனர். பாலம் உடையும் துயரக் காட்சி வீடியோவாக்கப்பட்டு, இணையத்தில் வெளியாக பலரும் தங்களின் அனுதாபங்களைத் தெரிவித்து வருகின்றனர்.