40 வகை கீரைகளும் அதன் முக்கிய மருத்துவ பயன்களும்
அகத்திக்கீரை - ரத்தத்தை சுத்தமாக்கி பித்தத்தை தெளிய வைக்கும். காசினிக் கீரை - சிறுநீரகத்தை நன்கு செயல் பட வைக்கும். உடல் வெப்பத்தை தணிக்கும். சிறுபசலைக் கீரை - சரும நோய்களை தீர்க்கும். பால்வினை நோயை குணமாக்கும். பசலைக்கீரை - தசைகளை பலமடைய செய்யும்.
கொடிபசலைக்கீரை - வெள்ளையை விலக்கும், நீர்க் கடுப்பை நீக்கும். மஞ்சள் கரிசலை - கல்லீரலை பலமாக்கும், காமாலையை விலக்கும். குப்பைகீரை - பசியைத்தூண்டும். வீக்கம் வத்த வைக்கும். அரைக்கீரை - ஆண்மையை பெருக்கும். புளியங்கீரை - ரத்த சோகையை விலக்கும், கண்நோயை சரியாக்கும். பிண்ணாக்கு கீரை - வெட்டையை, நீர்க்கடுப்பை நீக்கும். பரட்டைக்கீரை - பித்தம், கபம் போன்ற நோய்களை விலக்கும். பொன்னாங்கண்ணி கீரை - உடல் அழகையும், கண் ஒளியையும் அதிகரிக்கும். சுக்கா கீரை - ரத்த அழுத்தத்தை சீர்செய்யும், சிரங்கு, மூலத்தை போக்கும். வெள்ளை கரிசலைக்கீரை - ரத்த சோகையை நீக்கும். முருங்கைக்கீரை - நீரிழிவை நீக்கும், கண்கள், உடல் பலம் பெறும். வல்லாரைக் கீரை - மூளைக்கு பலம் தரும். முடக்கத்தான் கீரை - கை, கால் முடக்கம் நீக்கும். வாயு விலகும். புண்ணக்கீரை - சிரங்கும், சீதளமும் விலக்கும். புதினாக் கீரை - ரத்தத்தை சுத்தம் செய்யும், அஜீரணத்தை போக்கும். நஞ்சுமுண்டான் கீரை - விஷம் முறிக்கும். தும்பை கீரை - அசதி, சோம்பல் நீக்கும். முள்ளங்கி கீரை - நீரடைப்பு நீக்கும். பருப்பு கீரை - பித்தம் விலக்கும், உடல் சூட்டை தணிக்கும். புளிச்ச கீரை - கல்லீரலை பலமாக்கும், மாலைக்கண் நோயை விலக்கும், ஆண்மை பலம் தரும். மணலிக் கீரை - வாதத்தை விலக்கும், கபத்தை கரைக்கும். மணத்தக்காளி கீரை - வாய் மற்றும் வயிற்றுப் புண் குணமாக்கும், தேமல் போக்கும். முளைக்கீரை - பசியை ஏற்படுத்தும், நரம்பு பலமடையும். சக்கரவர்த்தி கீரை - தாது விருத்தியாகும். வெந்தயக்கீரை - மலச்சிக்கலை நீக்கும், மண்ணீரல், கல்லீரலை பலமாக்கும். வாத, காச நோய்களை விலக்கும். தூதுவளை - ஆண்மை தரும். சரும நோயை விலக்கும். சளித்தொல்லை நீக்கும். தவசிக் கீரை - இருமலை போக்கும். சாணக் கீரை - காயம் ஆற்றும். வெள்ளைக் கீரை - தாய்ப்பாலை பெருக்கும். விழுதிக் கீரை - பசியைத் தூண்டும். கொடிகாசினி கீரை - பித்தம் தணிக்கும். துயிளிக் கீரை - வெள்ளை வெட்டை விலக்கும். துத்திக் கீரை - வாய், வயிற்றுப்புண் அகற்றும். வெள்ளை மூலம் விலக்கும். காரகொட்டிக் கீரை - மூலநோயை போக்கும். சீதபேதியை நிறுத்தும். மூக்குதட்டை கீரை - சளியை அகற்றும். நருதாளி கீரை - ஆண்மையைப் பெருக்கும், வாய்ப்புண் அகற்றும்.
- ருக்மணிதேவி நாகராஜன்
|