உயர் பதவிகளுக்கான வழிகாட்டி...
இன்றைய நிலையில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற இந்திய ஆட்சிப் பணியில் பெண்களே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால், அவர்களால் பெருநகரங்களில் உள்ள கோச்சிங் சென்டர்களுக்கு செல்ல முடியாமலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமலும் போவதால் பலருடைய கனவு மெய்ப்படாமல் போய்விடுகிறது. அவர்களுக்காகவே படிக்கும்போதே இந்திய குடியியல் பணி குறித்து தயாராவது எப்படி, வீட்டில் இருந்தே படிப்பைத் தொடர்வது எப்படி என விளக்குகிறார் ஆபீசர்ஸ் ஐ.ஏ.எஸ். அகாடமி இயக்குநர் இஸ்ரவேல் ஜெபசிங்.
‘‘இக்கால இளைஞர்களிடையே சமூகப் பணியில் ஈடுபட்டு சேவை செய்ய வேண்டும் என்ற எண்ணம் பரவி வருகிறது. அதிலும் இந்திய குடியியல் பணியில் (ஐ.ஏ.எஸ்.) சேர்ந்து சேவை செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அதிகரித்து வருகிறது. இந்திய குடியியல் பணியில் சேர்வதற்கு தேசிய பொது தேர்வாணையம் ஆண்டிற்கு ஒரு முறை நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வை எழுதி தேர்ச்சி அடைய வேண்டும். இந்திய அளவில் நடத்தப்படும் கடினமான தேர்வுகளில் இதுவும் ஒன்று. எனினும் முறையாகப் பயிற்சி பெற்றால் ஜெயிப்பது நிச்சயம்.
இந்தத் தேர்வை பொறுத்தவரை மூன்று பாகங்கள் உண்டு. முதலில் தகுதித் தேர்வு என்று சொல்லப்படும் பிரிமிலினரி தேர்வு. அதன் பின்னர் முதன்மை தேர்வு. இறுதியில் நேர்முகத் தேர்வு என மாணவர்கள் ஒவ்வொரு தேர்விலும் தேர்ச்சியடைய வேண்டும். இறுதியாக நடத்தப்படும் நேர்முகத் தேர்வில் தேர்ச்சி அடைபவர்களுக்கு இந்திய குடியியல் பணியில் பணிபுரிய வாய்ப்பு கிடைக்கும். இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்ற எண்ணத்தில் லட்சக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள்.
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற தேர்வுகளுக்கு மாணவர்கள் குறைந்தது ஓராண்டாவது தங்களை தயார் செய்ய வேண்டும். கல்லூரி காலம் முடிந்த பின்னர் இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயார் செய்வதால் பல மாணவர்களுக்கு இந்த ஓராண்டு காலம் என்பது வீணாகி விடுகிறது. பல மாணவர் களுக்குள் இந்தக் கனவு இருந்தாலும் மிகச் சில மாணவர்களே அவர்களுடைய கல்லூரி காலத் திலே இது போன்ற போட்டித் தேர்வுகளுக்கு தயாராகிறார்கள்.
பெரும்பாலான மாணவர்கள் கல்லூரி முடித்த பிறகே இது போன்ற போட்டி தேர்வுகளுக்கு தங்களைத் தயார்படுத்தத் துவங்குகிறார்கள். பெரும்பாலும் கல்லூரிகள் மாலை 4 மணிக்கே முடிவடைந்து விடுகிறது. அதற்கு பின்பு உள்ள நேரத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகிறார்கள். அந்த நேரத்தை வீணாக்காமல் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற போட்டித் தேர்வுகளுக்குத் தயாரானால் கல்லூரி படிப்பை முடிக்கும்போதே தேர்வில் பங்கேற்று வெற்றி பெற்றுவிடலாம்.
கல்லூரியில் படிக்கும்போதே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராக, சென்னையில் உள்ள ஆபீசர்ஸ் ஐ.ஏ,எஸ். அகாடமி 3 வருட இன்டகிரேட்டட் பயிற்சியினை மாணவர்களுக்கு அளித்து வருகிறது. இந்த 3 வருடப் பயிற்சி கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்காக பிரத்யேகமாக நடத்தப்பட்டு வருகிறது. இப்பயிற்சியில் சேர்ந்து தயாராகும் மாணவர்கள், தங்கள் கல்லூரி நேரம் முடிந்த பின்னரே அகாடமியில் வந்து பயிற்சியினை எடுத்துக் கொள்கின்றனர். கல்லூரி நேரத்திற்கு பின்பு அகாடமியில் வந்து பயிற்சி எடுக்க முடியாதவர்கள், ஆன்லைன் மூலமாக பயிற்சி வகுப்பை எடுத்துக் கொள்கிறார்கள்.
இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமின்றி கிராமப்புற மாணவர்களுக்கும் பயனுள்ள வகையில் இருக்கிறது. ஐ.ஏ.எஸ். தேர்வில் வெற்றி பெற்று இன்று நிர்வாக திறமையால் பல இளைஞர்கள் சாதனை படைத்து வருகிறார்கள். அதிலும் பெண்களின் பங்கேற்பு இப்போது உயர்ந்து வருகிறது. பல கிராமப்புற மாணவ - மாணவிகள் இந்தத் தேர்வை எழுதி தேர்ச்சி பெறவேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். பெரும்பாலான ஐ.ஏ. எஸ். அகாடமிகள் சென்னை போன்ற பெரும் நகரங்களில்தான் உள்ளது.
அதனால் கிராமப்புற மாணவர்களின் பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு, தங்குமிடம், பொருளாதார வசதி ஆகியவற்றை மனதில் வைத்து பயிற்சி நிறுவனங்களுக்கு அனுப்ப மறுத்து விடுகின்றனர். அதுபோன்ற மாணவர்களுக்கும் இந்த ஆன்லைன் பயிற்சி பயனுள்ளதாக இருக்கிறது.ஆன்லைன் பயிற்சியில் இருக்கும் ஒவ்வொரு மாணவரும் இணையதளம் மூலமாக பயிற்சி எடுத்துக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி பணிக்குச் சென்று கொண்டே ஐ.ஏ.எஸ். தேர்வுக்குத் தயாராகும் மாணவர்களுக்கும், வேறு மாநிலங்களில் இருந்து பயிற்சி பெற விரும்பும் மாணவர்களுக்கும் இந்த ஆன்லைன் பயிற்சி வகுப்புகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அகாடமியில் வழக்கமாக நடத்தப்படும் பயிற்சி வகுப்புகள் அப்படியே காணொளியாக பதிவேற்றம் செய்யப்பட்டு மாணவர்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.
இதனால், அவர்கள் வகுப்பறைக்குச் செல்லாமலே வீட்டில் இருந்தே வகுப்பறைக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தும் கேட்டும் தெரிந்து கொள்ளலாம். மேலும், இந்த இணையவழி வகுப்புகளுக்கு வழக்கமான பயிற்சி வகுப்புகளைக் காட்டிலும் குறைவான கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஏனெனில், இணையவழி பயிற்சியில் சேருபவர்கள் பெரும்பாலும் பெண்களும், கிராமப்புற மாணவர்களுமாகவே இருப்பதால் இச்சலுகை வழங்கப்பட்டுள்ளது. www.officersiasacademy.com என்ற இணைய தளத்தின் வழியாகத் தொடர்பு கொண்டு பயிற்சி வகுப்பில் சேர்ந்து கொள்ளலாம். இனிவரும் காலங்கள் போட்டித் தேர்வுகள் நிறைந்தது. எனவே, நாம் அரசின் உயர் பதவி மற்றும் அரசுப் பணிகளுக்கு செல்ல வேண்டுமானால் பயிற்சி என்பது மிகவும் அவசியமாகிறது. ஆகையால் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கும் மாணவ-மாணவிகளுக்கு இதுபோன்ற 3 வருட இன்டகிரேட்டட் பயிற்சி ஒரு வரப்பிரசாதம்.’’
- தோ.திருத்துவராஜ்
|