பிரண்டையின் பயன்கள்



வாசகர் பகுதி

* பிரண்டை துவையல் மிகுந்த ருசியுள்ளது. இதைச் சாப்பிட்டால் பசி உண்டாகும்.
* செரிமானக் கோளாறைப் போக்கும்.
* மலச்சிக்கலை நீக்கும்.

* குடலில் புழு இருந்தால் அவற்றைக் கொல்லும்.
* உடலுக்கு பலத்தைக் கொடுக்கும்.
* நரம்புத் தளர்ச்சியைப் போக்கும்.
* ஆண்மையைப் பெருக்கும்.
* கப நோய்கள் நீங்கும்.
* பிணியினால் நொந்து மெலிந்த உடல் வன்மை பெறும்.
* எலும்பு முறிவைக் கூட்டுவிக்கும்.
* பிரண்டை கொடிக்கு வச்சிரவல்லி, சஞ்சீவி, உத்தன என்கிற பெயர்களும் உண்டு.
* பிரண்டையில் புரதம், கொழுப்பு, நார்ப்பொருள், மாவுப்பொருள், கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகியசத்துக்கள் உள்ளன.
* பிரண்டையுடன் சிறிது மிளகைக் கூட்டி அரைத்து சுண்டைக்காய் அளவு தினந்தோறும் இரு வேளைசாப்பிட்டு வந்தால் சுவாச காசம் (ஆஸ்துமா) குணப்படும்.
* பிரண்டையால் செய்யப்பட்ட வடகத்தைச் சாப்பிட்டு வந்தால், கப நோய்கள் நீங்கும்.
* பிரண்டை தண்டுகளை சிறிய அளவில் நறுக்கி ரசத்தில் சேர்த்துக் கொதிக்க வைத்து, ஒரு டம்ளர குடித்தால் எலும்புகள் பலம் பெறும்.

- இல.வள்ளிமயில், திருநகர்.