ராகி சேமியா இட்லி



.என்னென்ன தேவை?

ராகி சேமியா - 200 கிராம்,
நறுக்கிய கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், வெங்காயம், தக்காளி, பட்டாணி அனைத்தும் சேர்த்து - 1 கப்,
நறுக்கிய பச்சைமிளகாய் - 4,
புதினா, கொத்தமல்லி - 2 டேபிள்ஸ்பூன்,
நறுக்கிய இஞ்சி - 1 டீஸ்பூன்,
உளுத்தம்பருப்பு - 1/4 கப்,
நெய் - 2 டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - சிறிது,
மாங்காய் பொடி - 1 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.

எப்படிச் செய்வது?

உளுத்தம்பருப்பை ஊறவைத்து அரைத்து கொள்ளவும். கடாயில் நெய் விட்டு காய்கறிகளை வதக்கி, புதினா, கொத்தமல்லி, உப்பு, பச்சைமிளகாய், இஞ்சி, பெருங்காயத்தூள், ராகி சேமியா கலந்து இறக்கவும். இத்துடன் அரைத்த உளுத்தம் பருப்பு கலவை, மாங்காய் பொடி, கொத்தமல்லித்தழையை கலந்து, இட்லி தட்டில் இட்லிகளாக ஊற்றி வேகவைத்து எடுத்து சூடாக பரிமாறவும்.