ரசியுங்கள்...



ருசியுங்கள்! எல்லா நாடுகளையும் சேர்ந்த ஆண்களும், பெண்களும் எந்தவித மதக்கோட்பாடும் இல்லாமல் வசிக்கும் சர்வதேச நகரம் தான் புதுச்சேரியில் உள்ள ஆரோவில். ஸ்ரீஅரவிந்த அன்னையால் தோற்றுவிக்கப்பட்ட ஆரோவில்லில் கடந்த பத்து வருடமாக இயங்கி வருகிறது மெரைன் டிரைவ் உணவகம். இதனை சகோதரர்களான கார்த்திகேயன் மற்றும் மதிவாணன் நிர்வகித்து வருகிறார்கள். ஆரோவில் சர்வதேச நகரம் என்பதால், மெரைன் டிரைவ் உணவகத்தில் அனைத்து தரப்பு மக்களும் சாப்பிடும் வகையில் உணவுகள் வழங்கப்படுகின்றன.

கான்டினென்டல், சைனீஸ், இந்தியன் என பலதரப்பட்ட உணவுகளை மிகவும் தரமாகவும் குறைந்த விலையில் வழங்கி வருகின்றனர் இந்த சகோதரர்கள். கடற்கரை ஓரத்தில் அமைந்திருக்கும் உணவகம் என்பதால் கடல் அலையின் ஓசையில் உப்புக் காற்று நம் முகத்தை தழுவ இங்கு ஒவ்வொரு உணவினையும் சுவைக்கலாம். இந்த இதழில் மெரைன் டிரைவ் உணவகத்தின் செப்களான அபி மற்றும் மோகன் கைப்பக்குவத்தில் அனைத்து வகை உணவுகளையும் சமைத்து மகிழுங்கள்.

தொகுப்பு: ப்ரியா மோகன்