அப்பாவிடம் பேச தடை விதிக்கும் அம்மா





ல.மேனனைப் பார்க்கும்போது, விளையாட்டுத்தனமான பெண்ணாகத்தான் இருப்பார். என்றாலும், ரொம்ப விவரமான ஆளு. சம்பள விஷயத்தில் ரொம்ப கறார். தொடர் ஹிட்டுக்குப் பிறகு தன் சம்பளத்தை ஏற்றியுள்ள அவர், படத்துக்கு கால்ஷீட் கொடுக்கும் விஷயத்தில் மட்டும் சரியான ஒத்துழைப்பு தருவது இல்லை என்கிறார்கள். அதாவது, அம்மணிக்கு 11ம் வகுப்பு படிப்பு இருக்கிறது. கேரளாவிலுள்ள ஸ்கூலுக்குச் செல்லும் அவர், அங்கு லீவு கிடைத்தால் மட்டுமே ஷூட்டிங்கிற்கு வர முடியும் என்று கறாராகச் சொல்கிறாராம். இதனால் சொன்ன தேதியில் ஷூட்டிங்கிற்கு வருவாரா? இல்லையா என்பதில் குழப்பம் நீடிப்பதால், இளம் முன்னணி ஹீரோக்கள் தங்கள் ஜோடியாக ல.மேனனை நடிக்க வைக்க தயங்குகிறார்களாம்.

‘ஸ்ருதி...’ நடிகை தினமும் தன் தந்தையிடம் செல்போனில் பேசலாம். ஆனால், அவரிடம் தன் சினிமா பணிகள் குறித்து பகிர்ந்துகொள்ளக் கூடாது என்று, முன்னாள் ஹீரோயினும், உலக நாயகனின் முன்னாள் காதல் மனைவியுமான ‘..கா’ கூறியிருக்கிறாராம். அதனால்தான் ‘ஸ்ருதி...’ நடிகை தன் தாயாரின் பாதுகாப்பில், மும்பையிலுள்ள வீட்டில் தங்கியிருக்கிறாராம். அங்கிருந்து ஷூட்டிங்கிற்கு செல்வது, பிறகு வீடு திரும்புவது என பிசியாகி விட்ட அவர், மீண்டும் தமிழில் நடிப்பதற்கான நல்ல சப்ஜெக்ட் அமையவில்லை என்கிறாராம். அவர் கேட்கும் சம்பளத்தைக் கொடுக்க, தமிழ் தயாரிப்பாளர்கள் முன்வரவில்லையாம். நடிகையின் கவனம் பாலிவுட்டிலும், டோலிவுட்டிலும் மட்டுமே இருக்கிறது. அங்குதான் கேட்கும் சம்பளம் கிடைக்கிறதாம்.

‘யார்யா’ நடிகருக்கு ரசிகைகள் தொல்லை அதிகரித்துவிட்டதால், தன் செல்போன் நம்பரை மாற்றிவிட்டாராம். அந்த நம்பரும் ஒரு நண்பர் மூலம் பொதுமக்களுக்கு தெரிந்துவிட்ட காரணத்தால், இப்போது அந்த நம்பரையும் மாற்றிவிட்டாராம். போன் செய்பவர்கள் எல்லோரும், ‘நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன உறவு?’ என்று கேட்டு தொல்லை கொடுக்கிறார்களாம். ஒருவருக்கு பதில் சொன்னால், அதை வேறுமாதிரி திரித்துப் பேசுகிறார்கள் என்பதால் பயந்து நடுங்கும் நடிகர், இனி செல்போனையே பயன்படுத்தக் கூடாது என்ற முடிவுக்கு வந்து, தன் நெருங்கிய நண்பரின் நம்பரை இயக்குநர்களுக்கு கொடுத்திருக்கிறாராம். ஆனால், தன்னுடன் நடிக்கும் இளம் நடிகைகளிடம் பேசுவதற்காக ஒரு தனி நம்பர் வைத்திருக்கும் நடிகர், அந்த நம்பரை மட்டும் இயக்குநர்களுக்கு கொடுக்கவில்லையாம்.


‘பசங்க’ இயக்குநரின் பெயரிடப்படாத புதுப் படத்தில் நடித்து வரும் ‘வம்பு’ ஹீரோ, படம் சம்பந்தமான தகவலை எந்த மீடியாவுக்கும் தனிப்பட்ட முறையில் சொல்லக்கூடாது என்று, படக் குழுவினருக்கு உத்தரவு போட்டுள்ளாராம். எந்த விஷயமாக இருந்தாலும் தன் மூலமாகத்தான் தெரியப்படுத்த வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கும் அவர், ட்விட்டரில் ஒவ்வொரு தகவலாக வெளியிடுவாராம். மீடியாவிலுள்ள சிலர் அந்த தகவலை எடுத்து இணையதளங்களில் வெளியிடுவார்களாம். பிறகு அதையே ‘காப்பி’ செய்து மற்ற மீடியாவினர் பயன்படுத்த வேண்டுமாம். ஏதாவது சந்தேகம் இருந்தால், ‘வம்பு’ ஹீரோவின் செல்போனுக்கு எஸ்.எம்.எஸ் செய்ய வேண்டுமாம். அவர் ஃபிரீ யாக இருந்தால், பதில் எஸ்.எம்.எஸ் அனுப்புவாராம். மற்றபடி யாரையும் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வரவழைத்து பேசுவதையோ அல்லது பேட்டி தருவதையோ அவர் விரும்பவில்லையாம்.

மலையாள ‘நம்பீச’ நடிகை, தீபாவளிக்கு ரிலீசான ‘....நாடு’ படத்தில் ஒரு பாட்டு பாடினார் அல்லவா? படத்தில் இதற்கு வாயசைத்து நடித்த ல.மேனன், ‘அவர் மட்டும்தான் பாடுவாரா?’ என்ற ரீதியில் கமெண்ட் அடித்தாராம். அதை யாரோ ‘நம்பீச’ நடிகையின் காதில் போட்டுவிட, அம்மணி ஆவேச நம்பீசனாக மாறிவிட்டாராம். ‘நானும், அந்த பொண்ணும் ஒரே தேசம். ஆனா, இப்படி கமெண்ட் அடிக்கலாமா? எனக்கு வாய்ப்பு கிடைச்சதால் பாடினேன். அவருக்கும் பாட ஆசை இருந்தா, மியூசிக் டைரக்டர் கிட்ட வாய்ப்பு கேட்கலாம். அதுக்கு நான் தடையா இருக்க மாட்டேன்’ என்று குமுறிய அவர், இனி பாட்டு பாடுவதைவிட, ஹீரோயினாக நடிப்பதில் மட்டுமே அதிக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளாராம்.


ஒரு மந்திரத்தின் பெயரைக் கொண்ட ‘மோனலிசா’ புன்னகை நடிகை, ஒரு படத்தில் நடித்தபோது, அதன் ஒளிப்பதிவாளரை மாய்ந்து, மாய்ந்து காதலித்தாராம். இறுதி நாளில் பிரியும்போது, அவரை இனி பார்க்க முடியாது என்ற உண்மை உலுக்கியதால், ஒரு விழா மேடையில் பொலபொலவென்று கண்ணீர்விட்டு அழுதாராம். படம் ரிலீசாகி வெற்றிபெறாத நிலையில், திடீரென்று நடிகையின் கவனம் ஒளிப்பதிவாளரின் பக்கம் இருந்து வேறு பக்கம் திரும்பிவிட்டதாக, விஷயம் அறிந்தவர்கள் சொல்கிறார்கள். இது காதலா? நட்பா என்றும் அவர்களால் கணிக்க முடியவில்லையாம். இதுகுறித்து நடிகையிடம் சிலர் கேட்டபோது, ‘நான் யாரையும் காதலிக்கல. ஏன் என்னைப்பற்றி ஆதாரம் இல்லாம வதந்தி பரப்பறீங்க?’ என்று ஆவேசத்துடன் கத்துகிறாராம்.

‘காட்டன்வீரன்’ மூலம் நேஷனல் அவார்டு வாங்கிய நடிகைக்கு மீடியா என்றாலே எட்டிக்காயாய் கசக்கும். இதற்கு காரணம், அவரைப்பற்றி பொய்ச் செய்திகள் பரப்புவதுதான் என்கிறார். ஒரு நாளிதழில், நடிகைக்கு தொழிலதிபர் ஒருவரை மணம் முடிக்க பேச்சுவார்த்தை நடக்கிறது என்று கட்டுக்கதை பரப்பினார்களாம். இதையறிந்து ஆவேசப்பட்ட நடிகையின் தாய்க்குலம், ‘அந்த கட்டுக்கதையை பரப்பிய ஆள்கிட்டயே கேளுங்க, என் மகளுக்கு எந்த ஊர்ல மாப்பிள்ளை பார்த்திருக்காருன்னு. எந்த தேதியில் கல்யாணம்? எந்த இடத்துல மண்டபம் பார்த்திருக்காருன்னும் கேட்டு சொல்லுங்க’ என்று, தன்னை விசாரித்த ஒருவரை உண்டு, இல்லை என்று செய்துவிட்டாராம்.

நரம்புத்தளர்ச்சி நோய் காரணமாக அடிக்கடி ஷூட்டிங் ஸ்பாட்டில் டென்ஷனாகும் ‘ஹன்ஸ்’ நடிகை, கடந்த வாரம் கடுமையான மலேரியா காய்ச்சல் காரணமாக பாதிக்கப்பட்டு, மும்பையிலுள்ள தன் வீட்டில் தங்கி சிகிச்சை பெற்றார். பிறகு தனக்கு நெருக்கமான சிலருக்கு போன் செய்து, ‘இப்ப நான் எடை குறைஞ்சிருக்கேன். ரொம்ப நாள் ரெஸ்ட் எடுக்கவும் முடியாது. நிறைய படத்துல நடிச்சுகிட்டிருக்கேன். சம்பளம் வாங்கியாச்சு. கால்ஷீட்டும் கொடுத்தாச்சு. ஒழுங்கா ஷூட்டிங்குக்கு வரலன்னா, பேரு ரிப்பேராயிடும். ஸோ, ட்ரீட்மென்ட் எடுத்தவுடனே நடிக்க வந்துடுவேன்’ என்று சொன்னாராம். அதன்படியே காய்ச்சல் குணமாவதற்கு முன்பே சென்னைக்கு திரும்பி, ‘கார்த்திகேய’ நடிகருடன் நடித்தாராம்.

புசுபுசுவென்று உடல் எடை கூடியதால் அதிர்ந்த ‘ஹாய் மச்சான்ஸ்’ நடிகை, இப்போது ஒரு அதிரடி ஆக்ஷன் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். அவரைப் பார்த்த இயக்குநர், ஆக்ஷன் காட்சிகளில் நடிக்க வேண்டும் என்றால், உடனே உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். இதையடுத்து சாப்பிடுவதை நிறுத்திய நடிகை, தினமும் ‘ஜிம்’மே கதியென்று கிடக்கிறார். டயட்டைக் கடைப்பிடித்து, கடகடவென்று ஆறு கிலோ எடையைக் குறைத்துவிட்டாராம். இந்நிலையில், மேலும் ஆறு கிலோ உடல் எடையைக் குறைக்க பகீரதப் பிரயத்தனம் செய்து வரும் அவர், விஜயசாந்தி நடித்த ஆக்ஷன் படங்களையும், ஆங்கில ஆக்ஷன் ஹீரோக்களின் படங்களையும் ஹோம் தியேட்டரில் பார்த்து, அவர்கள் எப்படி சண்டை போடுகிறார்கள் என்பதை கவனிக்கிறாராம். இனி சினிமாவில் அதிக கவனம் செலுத்த விரும்பும் அவர், கல்யாணத்துக்கு ‘குட் பை’ சொல்லிவிட்டாராம்.

‘அங்காடித் தெரு’ அறிமுக நாயகனின் லொள்ளுகள் தாங்க முடியவில்லை என்று அலறுகிறார்கள், ‘போர்வெல்’ படக் குழுவினர். படத்தில் நடிக்க ஒப்பந்தமாகும்போது, ‘இந்தப் பூனையும் பால் குடிக்குமா?’ என்ற ரகத்தில் இருந்த அவர், இப்போது ஏகப்பட்ட பிரச்னைகள் செய்து, ‘கால்ஷீட் சொதப்பல் திலகம்’ என்ற பட்டத்தை வாங்கியிருக்கிறாராம். ‘எங்கள் படத்துக்கு கால்ஷீட் ஒதுக்கிக் கொடுங்கள்’ என்று கேட்டால், ‘மலையாளத்துல நான் ரொம்ப பிசி. தெலுங்குல நான் ரொம்ப பிசி’ என்பதாக, ஓவர் ‘பில்டப்’ செய்து, தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறாராம். சொல்லிக்கொள்ளும்படி பெரிய படங்கள் இல்லை. இந்நிலையில், வளர்ந்து வரும் ஹீரோவான அவர், ஏன் இப்படி கால்ஷீட் சொதப்புகிறார் என்று தெரியவில்லை என்று, அவரால் பாதிக்கப்பட்டவர்கள் புலம்புகிறார்கள்.
(படத்தில் இருக்கும் நடிகைகள் அமிர்தா ஸூட், டெபி, ஹனி, ரூபி அஹ்மத் ஆகியோருக்கும் இந்தச் செய்திகளுக்கும் தொடர்பில்லை)
- மாயன்