சுப்ரமண்யபுரம் - 2



“சிவகார்த்திகேயனுக்கும் ‘கார்த்திகேயன்’ படத்துக்கும் எந்த சம்பந்தமும் இல்லை’ என்கிறார் அதன் இயக்குநர் சந்து. இதன் நாயகன்  நிகில் தெலுங்கில் நாலைந்து படங்களில் நடித்துள்ளாராம். தமிழில் இதுதான் முதல் படமாம். இதன் நாயகி ஸ்வாதி. “ ‘சுப்ரமண்யபுரம்’ தமிழில் எனக்கு மிகப்பெரிய புகழை கொடுத்தது. ஆனால் அந்த நேரத்தில் தெலுங்கில் பிஸியாக இருந்ததால் தமிழில் கவனம் செலுத்த முடியவில்லை.


இப்போது என்னுடைய முழு கவனமும் தமிழ் சினிமா மீதுதான் உள்ளது. அந்த வகையில் இந்தப் படம் எனக்கு முக்கியமானது. ஏனென்றால், இந்தப் படத்தை இன்னொரு ‘சுப்ரமண்யபுரம்’ என்று சொல்லலாம். அந்தளவுக்கு என்னுடைய கேரக்டருக்கு முக்கியத்துவம் இருக்கும். சுப்ரமண்யபுரம் என்கிற ஊரில் அடுத்தடுத்து சிலர் மர்மமான முறையில் இறக்கிறார்கள். அதை நானும் ஹீரோவும் கூட்டு சேர்ந்து எப்படி கண்டுபிடிக்கிறோம் என்பதுதான் கதை. சாகசம் கலந்த இந்த கதை எனக்கு முற்றிலும் புது அனுபவமாக இருந்தது. அதே அனுபவத்தை படம் பார்க்கும் போது நீங்களும் ஃபீல் பண்ணுவீர்கள்” என்கிறார் ஸ்வாதி.

-ரா