ஆண்ட்ரியாவின் ஆசை!



‘உத்தம வில்லன்’ படத்தில் கமலுடன் நடித்ததைப் பற்றிப் பெருமை பொங்கப் பேசுகிறார் ஆண்ட்ரியா. பாடகியான தனக்கு அவருடன் சேர்ந்து பாடும் வாய்ப்புக் கிடைக்கும் நாளை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாராம்.

‘வல்லினம்’, ‘மறுமுனை’, ‘திலகர்’ படங்களில் நடித்த மிருதுளா பாஸ்கர், நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டதாகவும், இனிமேல் அவர் மேற்படிப்பைத் தொடர்வார் என்றும் கூறப்படுகிறது. இதுபற்றிக் கேட்டால், சிரிக்கிறார். ‘தமிழில் ஒரேமாதிரி கேரக்டர்கள் வந்ததால் ஒப்புக்கொள்ளவில்லை.

இதனால்தான் தொடர்ந்து நடிக்க நான் ஆர்வம் காட்டவில்லை என்று வதந்தி பரவியுள்ளது. ஒரு படத்தில் நடித்தாலும் அந்த கேரக்டர் பரபரப்பாகப் பேசப்பட வேண்டும். தெலுங்கில் ராம்கோபால் வர்மாவின் ‘ஐஸ்கிரீம் 2’ படத்தில், கதைக்கு மிகவும் தேவைப்பட்டதால் கிளாமராக நடித்தேன்.

 தொடர்ந்து அதுபோல் நடிக்க விருப்பம் இல்லை. பெங்களூரில் சட்டம் 4வது ஆண்டு படிக்கிறேன். நாட்டியத்தில் ஆர்வம் இருப்பதால், ‘நிர்த்ய மோட்ச்’ என்ற நடனப் பள்ளி நடத்துகிறேன். நடனத்துக்கு அதிக நேரம் ஒதுக்குவதால், சினிமாவில் இடைவெளி ஏற்பட்டுள்ளது. பரத நாட்டியத்துக்கு முக்கியத்துவம் கொண்ட கதை அமைந்தால் நடிப்பேன். மற்றபடி நடிப்புக்கு நான் முழுக்குப் போடவில்லை’ என்று, கையைப் பிடித்து சத்தியம் செய்தார்.

- தேவராஜ்