ஒதுங்குகிறார் ஓவியா!



ஓவியா அதிக சம்பளம் கேட்கிறாராம். இதனால் படவாய்ப்பு குறைந்துவிட்டது. மேலும், புதுமுகங்கள் நாளுக்கு நாள் படையெடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இதுபற்றி அவரிடம் கேட்டால், கோபப்படுவதற்கு பதில் சிரிக்கிறார்.

‘ஒருகாலத்தில் நானும் புதுமுகம்தானே? மற்ற நடிகைகள் இருந்ததால், எனக்கான வாய்ப்பு கிடைக்காமலா போய்விட்டது? நான்தான் அதிக படங்களில் நடிப்பதை குறைத்து விட்டேன்.

வருடத்துக்கு ஒன்றிரண்டு படத்தில் நடித்தாலும், அது பேசப்பட வேண்டும் என்று நினைத்து ஒதுங்கி இருக்கிறேன். இனிமேல் நல்ல கேரக்டர் கிடைத்தால் மட்டுமே நடிப்பேன். படங்களின் எண்ணிக்கையை விட, என் கேரக்டருக்கான முக்கியத்துவம் மட்டுமே பிரதானமாக இருக்கும். மற்றபடி அதிக சம்பளம் கேட்பதாக சொல்வது வதந்தி. என்னை வைத்து  படம் தயாரித்தவர்களிடம் கேட்டுப்பாருங்கள், உண்மை தெரியும்’ என்கிறார்.

- தேவராஜ்