ராய் லட்சுமியின் அன்பு!



சமீபத்தில் தனது பிறந்த நாளை அம்பத்தூரில் உள்ள ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடினார் ராய் லட்சுமி. அங்குள்ள குழந்தைகளுக்கு தன் கையாலேயே கேக் ஊட்டி விட்டு, அறுசுவை உணவும் வழங்கியிருக்கிறார். நோட்டுப்புத்தகம் மற்றும் பரிசு களையும் கொடுத்த அவரைப் பார்த்து, குழந்தைகள் ஆனந்தக்கண்ணீர் விட்டார்களாம்.

‘படிப்பு படிப்புன்னு அலையுறதால அந்தப்பொண்ணு இனிமே நடிக்க வராதுப்பா’ என்று சிலர் கொளுத்திப் போடுவதைக்கண்டு கொதித்துப் போயிருக்கிறார் லட்சுமி மேனன். ‘படித்துக்கொண்டே நடிப்பேன்’ என்று ட்விட்டரில் அறிக்கை விட்டிருக்கிறார்.