பூஜா என்றாலே பயம்!



‘விஸ்வரூபம் 2’ மட்டுமே பூஜா குமாரிடம் இருக்கிறது. அவரை ‘கமல்ஹாசன் தோட்டத்து ரோஜா’ என்று நினைத்து, மற்ற இயக்குனர்களும், ஹீரோக்களும் தங்கள் படத்தில் நடிக்க அழைப்பதில்லையாம்.

 இதனால் பேரதிர்ச்சி அடைந்த பூஜா குமார், ‘வெளியார் படங்களில் நடிக்க மாட்டேன் என்று நான்  எப்போதுமே சொன்னதில்லை. தொடர்ந்து நான் கமல்ஹாசன் படங்களில் நடிப்பதால், மற்றவர்கள் மத்தியில் இந்த எண்ணம் ஏற்பட்டிருக்கும் என்று நினைக்கிறேன்’ என்கிறார். ஆனால், அவரது அமெரிக்க ஆங்கிலப் பேச்சைக் கேட்டு படபடப்புக்கு ஆளாகும் இயக்குனர்கள், அம்மணியை ஷூட்டிங் ஸ்பாட்டில் எப்படி வேலை வாங்குவது என்று அஞ்சுகிறார்களாம்.

தமிழில் சில படங்களில் நடித்த மதுஷாலினிக்கு பாலா கொடுத்த நல்ல வாய்ப்பு, ‘அவன் இவன்’. அந்தப் படத்துக்குப் பிறகு மதுஷாலினி அதிக சம்பளம் கேட்டதாலும், தொடர்ந்து தமிழ்ப் படங்களில் நடிக்க ஆர்வம் காட்டாததாலும், இந்திக்குச் சென்று முன்னணி இடத்தைப் பிடித்து விடலாம் என்று பகல் கனவு கண்டதாலும், பட வாய்ப்பு கிடைக்காமல் சோர்ந்து போனார். இப்போது அவரை ‘தூங்காவனம்’ படத்தில் நடிக்க  கேட்டிருக்கிறார்கள். சின்ன கேரக்டர் என்றாலும், கமல்ஹாசன் காம்பினேஷன் என்பதால், தமிழில் ரீஎன்ட்ரி சிறப்பாக அமையும் என்று நம்பி காத்திருக்கிறாராம்.

- தேவராஜ்