தென்றலாக வீசும் காற்று புயலாக மாறி...



சிவகார்த்திகேயன், மா.கா.பா போன்ற வீடியோ ஜாக்கிகள் சினிமா நட்சத்திரங்களாக மாறியுள்ள நிலையில் வீடியோ ஜாக்கி விக்னேஷ் கார்த்திக் ‘குற்றம் நடந்தது என்ன’ படத்தின் மூலம் ஹீரோவாக அரிதாரம் பூச ஆரம்பித்திருக்கிறார். இவருடன் ஸ்ரீதேஜா மற்றும் பாலுவும் ஹீரோவாக களமிறங்கியுள்ளார்கள். இதன் நாயகிகள் பிரியா, ஊர்மிளா ஷெட்டி. முக்கியமான வேடத்தில் நாசர், ஜி.வி.பிரசாத் நடிக்கிறார்கள். பாலிவுட்டில் பிரபல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக வேலை பார்த்துள்ள சசிதர் இப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்திருக்கிறார்.


 
‘‘பாலிவுட்டில் வேலை பார்த்துவிட்டு தமிழ்நாட்டில் என்ன வேலை என்று கேட்கலாம். என்னுடைய முதல் படத்தை தாய் மொழியில் இயக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். தென்றலாக வீசும் காற்று எப்படி புயலாகி மாறி சீறுகிறதோ அதுபோல மென்மையான குணம் கொண்ட ஒரு பெண் எப்படி பாயும்புலியாக சீறுகிறார் என்பதுதான் கதை. நாயகிகள் பிரியா, ஊர்மிளா ஷெட்டி இருவரும் இந்தப் படத்துக்குப் பிறகு தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் வருவது நிச்சயம். அந்தளவுக்கு அழகிலும், நடிப்பிலும் மிரட்டியிருக்கிறார்கள்’’ என்று ஹீரோயினிசம் பேசுகிறார் இயக்குனர் சசிதர்.
-ரா