மைசூர் சாண்டல் பொண்ணு! சாண்டல்வுட் சங்கதி



‘என்னை அறிந்தால்’, ‘உத்தம வில்லன்’ என்று தன் அடையாளத்தை தமிழில் அழுத்தமாக பதித்திருக்கும் பார்வதி நாயர் அடிப்படையில் சாண்டல்வுட் பொண்ணு. கர்நாடகாவில் பள்ளிப் பருவத்தை கடந்தவர், 2009ல் மிஸ் கர்நாடகாவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். பள்ளியில் படிக்கும்போது உலகின் நீளமான ஓவியத்துக்காக கின்னஸில் இடம்பெற்ற குழுவினரில் ஒருவராக இருந்தவர் என்பது ரொம்பப் பேருக்கு தெரியாது.

மைசூர் சாண்டல் விளம்பரத்தில் தோன்றியவருக்கு கன்னட சினிமா ‘பியூட்டிஃபுல்’ என்கிற படம் மூலமாக சிகப்புக் கம்பளத்தை விரித்தது. சட்டென்று சாண்டல்வுட்டின் ஹாட் பிராப்பர்ட்டி ஆனவர் அப்படியே தமிழ், தெலுங்கு என்று தன் சாம்ராஜ்யத்தை விரித்துவிட்டார்.மீண்டும் கன்னடத்தில் நடிக்க வேண்டும் என்று தணியாத தாகம் கொண்டிருந்தாலும் கால்ஷீட் டயரி அதற்கு அனுமதிக்கவில்லையே என்று வேதனைப்படுகிறார்.