பல்லாவரம் பால்கோவா!



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

பிரபலங்களுக்கு பிரச்சினை ஏற்படும்போது ‘ஃப்ளாஷ்’ அடிக்கும் ஊடகங்கள், அதிலிருந்து அவர்கள் விடுபடும்போது கண்டுகொள்ளாதது அவலம். நல்ல வேளையாக யமுனா, வழக்கிலிருந்து விடுபட்டதை ‘வண்ணத்திரை’யாவது உரத்துச் சொன்னதே என்பதுதான் ஆறுதல்.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

திரையில் மின்னும் வஞ்சியரின் வாழ்வை சீரழிக்கவே பாலியல் வழக்கு பாய்கிறதோ என்கிற எண்ணத்தை, திருமதி யமுனாவின் நெஞ்சக்குமுறல் தெரியப் படுத்துகிறது. தான் ஒழுக்க மானவள் என்பதை நிரூபிக்கவே அவருக்கு ஐந்து ஆண்டுகள் ஆனது என்பது அநியாயம்.
- கு.ப.இரகுநாதன், பூவிருந்தவல்லி.

குட்டைப்பாவாடையுடன் துள்ளிக் குதித்து ஓடும் பல்லாவரம் பால்கோவா  சமந்தாவின் முன் மற்றும் பின் அட்டைப்படம், ஏகத்துக்கும் ஹார்மோன்களை  சுரக்க வைத்துவிட்டது.
- எஸ்.அர்ஷத் ஃபயாஸ், குடியாத்தம்.

ஏழாம் பக்க ஸ்டில்லில் இடம்பெற்ற பூஜாயின் மத்தியப் பிரதேசம், கோல்ஃப் கிரவுண்டு மாதிரி பரந்து விரிந்து பரவசப்படுத்தியது.
- பொ.சின்னராஜா, குற்றாலம்.

திறமை ஒன்றே எத்துறையிலும் சாதிப்பதற்கான தகுதி என்பதை தன்னுடைய கடின உழைப்பின் மூலம் நிரூபித்து, மூன்றாம் பாலினத்தவர் என்கிற தடையை உடைத்தெறிந்து சினிமாவில் சாதித்திருக்கும் செல்வி சினேகாவுக்கு வாழ்த்துகள்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

புன்னகை அரசி சினேகா மறுபடியும் மேக்கப் போட்டுக்கொண்டு கேமரா முன்பாக நிற்கிறார் என்கிற தகவல், அவருடைய ஆரம்பகால ரசிகர்களான எங்களுக்கு பெரிய ஆறுதல். வாம்மா, மின்னல்!
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.

சப்பாத்தி குறித்த சரோஜா மாமியின் பதில் ஏகத்துக்கும் கிளுகிளுப்பு. இனி மூன்று வேளையும் எனக்கு உணவு சப்பாத்திதான்.
- திலீபன், தூக்கநாயக்கன்பாளையம்.