பட்டதாரி



துரத்தும் கன்னி.. மிரளும் காளை!

வேலையில்லா பட்டதாரி யான அபி சரவணனுக்கு பெண்கள் என்றாலே அலர்ஜி. இந்த பண்பாலேயே அவரை துரத்தித் துரத்தி காதலிக்கிறார் அதிதி. அபியின் உதாசீனத்தால் மனம் வெறுத்து தற்கொலைக்கு முயற்சிக்கிறார் அதிதி. காதல் என்றாலே அபிக்கு ஏன் வேப்பங்காய், இருவரும் இணைந்தார்களா என்பது பரபர கிளைமேக்ஸ்.

அபி சரவணனிடம் இளமை துள்ளுகிறது. நாயகிகள் அதிதி, ராசிகா இருவரும் அழகு. படத்தின் பெரிய பலமே எஸ்.எஸ்.குமரனின் இசைதான். ஒளிப்பதிவாளர் சூரியன் கதையின் விறுவிறுப்புக்கு உதவியிருக்கிறார்.க்ளிஷேவான காட்சிகள், மொக்கையான வசனங்கள் என்று படம் ரொம்ப வீக்காக இருந்தாலும், தன்னால் முடிந்தளவு ஒப்பேற்ற முயற்சித்திருக்கிறார் இயக்குநர் சங்கர் பாண்டி.