“கன்னத்தில் அறைந்தேன்!”ராதிகா ஆப்தே



சமீபத்தில் ஒரு டிவி பேட்டியில் ‘கபாலி’ ஹீரோயின் ராதிகா ஆப்தே, அதிர்ச்சிகரமான ஒரு தகவலை வெளிப்படுத்தினார்.“நான் அப்போதுதான் தென்னிந்திய மொழிப்படங்களில் நடிக்க ஆரம்பித்திருந்தேன்.

ஒரு தமிழ்ப் படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு. செட்டில் அமர்ந்திருந்தபோது அந்தப் படத்தின் ஹீரோ தன்னுடைய கால்களால் என்னுடைய கால்களை வருடி சில்மிஷம் செய்ய ஆரம்பித்தார்.

உடனடியாக எதுவும் யோசிக்காமல் அந்த ஹீரோவின் கன்னத்தில் சப்பென்று அறைந்தேன். அதன்பிறகு படம் முடியும்வரை அவர் வாலைச் சுருட்டி வைத்திருந்தார்” என்று சொன்னார் ராதிகா.

ராதிகாவின் இந்தப் பேட்டி வெளிவந்த பிறகு கோலிவுட்டில், ‘யார் அந்த ஹீரோ’ என்று ஆளாளுக்கு ஆராய ஆரம்பித்தார்கள். ‘அ’வில் பெயர் தொடங்கும் நாலெழுத்து ஹீரோ என்று அந்த பட யூனிட்டில் இருந்தவர்கள் சொல்லி நமுட்டுச் சிரிப்பு சிரிக்கிறார்கள்.

- இரும்புக்கை மாயாவி