தன் கையே தனக்குதவி!
சரோஜாதேவி பதில்கள்
* பெண்ணின் வெட்கம்; ஆணின் வெட்கம் - எது அழகு? - சங்கீத சரவணன், மயிலாடுதுறை ஆண் வெட்கப்படுவதைப் பார்க்க சகிக்காதே தலைவரே! அழகு என்றாலே அது பெண்தான்.
* ‘களவும் கற்று மற’ என்று எதை சொல்கிறார்கள்? - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு. அந்தக் காலத்தில் சாமியாராகப் போக விரும்புபவர்களுக்கு ‘கலவும் கற்று மற’ என்று சொல்லியிருப்பார்கள். அது மருவி விட்டது.
* பூவின் அடுக்கைவிட பெண்ணின் இடுப்பு மடிப்புதானே அழகு? - எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு. சிறப்பான ஆராய்ச்சி. உங்களுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும்.
* காதலின் அஸ்திவாரம் எது? - த.சத்தியநாராயணன், அயன்புரம். இளசுகளுக்கு வயசு.... பெருசுகளுக்கு மனசு.
* தன் கையே தனக்குதவி என்கிறார்களே? - கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம். பேச்சுலர்களுக்கு யாரோ ஓர் அனுபவஸ்தர் சொன்ன அறிவுரை.
|