தன் கையே தனக்குதவி!



சரோஜாதேவி பதில்கள்

* பெண்ணின் வெட்கம்; ஆணின் வெட்கம் - எது அழகு?
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை
ஆண் வெட்கப்படுவதைப் பார்க்க சகிக்காதே தலைவரே! அழகு என்றாலே அது பெண்தான்.

* ‘களவும் கற்று மற’ என்று எதை சொல்கிறார்கள்?
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
அந்தக் காலத்தில் சாமியாராகப் போக விரும்புபவர்களுக்கு ‘கலவும் கற்று மற’ என்று சொல்லியிருப்பார்கள். அது மருவி விட்டது.

* பூவின் அடுக்கைவிட பெண்ணின் இடுப்பு மடிப்புதானே அழகு?
- எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு.
சிறப்பான ஆராய்ச்சி. உங்களுக்கு நோபல் பரிசு வழங்கவேண்டும்.

* காதலின் அஸ்திவாரம் எது?
- த.சத்தியநாராயணன், அயன்புரம்.
இளசுகளுக்கு வயசு.... பெருசுகளுக்கு மனசு.

* தன் கையே தனக்குதவி என்கிறார்களே?
- கே.செல்வராஜ், வழுதரெட்டிப்பாளையம்.
பேச்சுலர்களுக்கு யாரோ ஓர் அனுபவஸ்தர் சொன்ன அறிவுரை.