தெறிக்க விடுகிறார் மயில்சாமி!



‘மன்னார் வளைகுடா’, ‘இன்னுமா நம்மள நம்புறாங்க’, ‘கண்டேன் காதல் கொண்டேன்’ போன்ற படங்களுக்கு வசனம் எழுதிய கே.எஸ்.பழனி இயக்குநராக புது அவதாரம் எடுத்துள்ளார். படத்தின் பெயர் ‘காசு மேலே காசு’. ஹீரோ ஷாருக். காயத்ரி ஹீரோயின்.

இன்னொரு ஹீரோவாக மயில்சாமி நடிக்கிறார். இவர்களுடன் கஞ்சா கருப்பு, கோவை சரளா, நளினி, மதுமிதா, ‘லொள்ளுசபா’ சாமிநாதன் ஆகியோரும் இருக்கிறார்கள். இசை பாண்டியன். ஒளிப்பதிவு சுரேஷ் தேவன். ஹரிஹரன், உதயகுமார், ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளார்கள்.

‘‘முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாக்கியிருக்கிறேன். மயில்சாமியின் காமெடியை புதுசாக நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. ஆனால் இந்தப் படத்தைப் பொறுத்தவரை அவருடைய பங்களிப்பு அதிகம். ஒரு இயக்குநருக்கான பொறுப்போடு இந்தக் கதையில் முழுவதும் இன்வால்வாகி நடித்துக் கொடுத்தார்.

கடுமையான கால்ஷீட் நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தப் படத்துக்காக அதிக நாட்களை ஒதுக்கிக் கொடுத்தார். அவர் செட்ல இருந்தாலே யூனிட்டே கலகலப்பாக இருக்கும். மொத்தத்தில் காமெடியில் தெறிக்க விட்டிருக்கிறார் மயில்சாமி’’ என்று மயில்சாமியின் புகழ் பாடுகிறார் இயக்குநர் கே.எஸ்.பழனி.

- ராஜா