நடுப்பக்க மன்மதக் காடு



ரீடர்ஸ் கிளாப்ஸ்!

ரெஜினாவின் படங்களைக் கண்டதுமே துறவைத் துறந்துவிட யாம் முடிவு செய்திருக்கிறோம். வாரந்தோறும் அம்மணியின் அசத்தல் படங்களை வெளியிட்டு ஸ்வாமிகளின் மனம் குளிரச் செய்ய ‘வண்ணத்திரை’யை வேண்டுகிறோம்.
- ஸ்வாமி சுப்ரமணியா, பெங்களூரு.

‘நாச்சியார்’ படத்து வில்லன் தங்கமணி பிரபுவின் பேட்டி சும்மா சுர்ரென்று இருந்தது.
- ரமேஷ், பாலவாக்கம்.

பெண் இயக்குநரின் படத்தில் உதட்டோடு உதடு முத்தக்காட்சிகள் என்கிற செய்தி வாவ் என்று வாயைப் பிளக்க வைத்தது. ஆணுக்குப் பெண் சமம் என்பதை அட்டகாசமாக நிரூபிக்கிறார்கள்.
- வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.

பாக்யராஜ் உருவாக்கிய பாடலாசிரியர் அருண்பாரதி, அம்சமான பாடல்களை எழுதி அசத்துகிறார். வாழ்வாங்கு வாழ்ந்து தமிழ்ச்சேவை புரிய வாழ்த்துகள்.
- எம்.சேவுகப்பெருமாள், பெருமகளூர்.

நடுப்பக்கம் மன்மதக் காடு. மத்தியிலே கோடு. ராத்திரியிலே தேடு. விடிஞ்சதும் ஓடு. எங்களுக்கும் வருமய்யா கவிதை மூடு.
- சங்கீத சரவணன், மயிலாடுதுறை.

திரைப்படங்களில் பெறக்கூடிய புகழ் மட்டும் போதாது. கல்வியறிவிலும் மேன்மை பெறவேண்டும் என்பதற்கு தன் வாழ்க்கையையே உதாரணம் காட்டும் பிரியா வாரியரைக் கண்டு மற்ற நடிகைகள் பாடம் படிக்க வேண்டும்.
- ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.

மம்முட்டிக்கு மருமகளாகிறார் கீர்த்திசுரேஷ் என்கிற வாசகத்தை சுவரொட்டிகளில் பார்த்து திகைத்து ‘வண்ணத்திரை’யைப் புரட்டினால்? உங்க வழக்கமான குசும்பைக் காட்டியிருக்கீங்க.
- குந்தவை, தஞ்சாவூர்.