இரவும் பகலும் மங்கலம்!
ரீடர்ஸ் கிளாப்ஸ்! ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்துக்கு நீங்கள் எழுதியிருப்பது விமர்சனமல்ல; அட்டகாசமான பாலியல் ஆய்வுக் கட்டுரை. அசத்தி விட்டீர்கள். - த.சத்தியநாராயணன், அயன்புரம்.
கிராஃபிக்ஸ் தொழில்நுட்பம் கொடிகட்டிப் பறக்கும் இந்தக் காலக்கட்டத்தில் கேரக்டருக்காகக் குண்டாவதெல்லாம் தேவையற்ற செயல். இதனால் சம்பந்தப்பட்ட நடிக, நடிகையரின் உடல்நலம்தான் பாதிக்கும். உண்டாகும் கேரக்டர் என்றால் இவர்கள் என்ன செய்வார்கள்? - சுவாமி சுப்ரமணியா, பெங்களூர்.
‘சரோஜாதேவி பதில்கள்’ பகுதியை புத்தகமாக தொகுத்து வெளியிட கேட்டு அலுத்துவிட்டோம். நல்லவேளையாக ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்று சினிமாப் படமாகவே வந்து எங்கள் வயிற்றில் பாலை வார்த்தது. - வண்ணை கணேசன், பொன்னியம்மன்மேடு.
காமப்பேய் எங்களை வேட்டையாடுகிறதோ இல்லையோ, நடுப்பக்க கவர்ச்சிப் பேய்கள் கன்னாபின்னாவென்று வேட்டையாடி விடுகின்றன. நடுப்பக்க மன்மதக் கோட்டை பார்த்துவிட்டு, இரவும் பகலும் மங்கலம் பாடிக் கொண்டிருக்கிறோம். - கவிஞர் கா.திருமாவளவன், திருவெண்ணெய்நல்லூர்.
‘நடிகையர் திலகம்’ கீர்த்தி சுரேஷ், எங்களைப் போன்ற இளைஞர்களுக்கு ரோல்மாடல் ஆக ஆகிவிட்டார். - ஆர்.கார்த்திகேயன், ஜோலார்பேட்டை.
வாய்ப்புகள் வசமாவதைப் பொறுத்தே வளர்ச்சி என்பதை கவுதம் கார்த்திக் புரிந்துகொள்ள வேண்டும். - ஏ.பி.எஸ்.ரவீந்திரன், வள்ளியூர்.
சரோஜாதேவியும் ஐபிஎல் பார்க்கிறார் என்பதை அறிந்து பெருமகிழ்ச்சி அடைகிறோம். - அ.காஜாமைதீன், நெய்க்காரப்பட்டி.
|